வணக்கம்,
நான் தான் வாழவந்தான், வருடத்தில் சில மாதங்கள் மட்டும் கர்நாடகத்தின் வெள்ள உபரிநீராக காவிரி பாயும் கோவில் நகரில் பிறந்தவன் நான். 'கெட்டும் பட்டணம் போ' என்பார்கள். ஆக எங்கோ பிறந்து என்ஜீநீரிங் படிக்க என்று இந்த சென்னைக்கு வந்தது, வென்றது, இழந்தவை, உணர்ந்தவை, ரசித்தவை என்றும், சென்னை எனக்குள் ஏற்பத்திய மாற்றங்களும், மேலே சொன்னதற்கு நேர்மாறாக நான் சென்னையை கெடுத்தும் வலைப்பதிவில் இடம் பெற இருப்பதால் இது ஏன் பட்டனப்ரவேசம் ஆகியது. வாழவந்தான் பெயர் காரணம் அறிய விரும்பும் அன்பு உள்ளங்களே, நான் மட்டும் இல்ல என்னை போல் இந்த வாழ்கையை வரமாக எண்ணிவாழ்பவர்கள் அனைவரும் வாழ வந்தவர்களே. மேலும் சென்னை நான் வாழவந்த இடம், எனக்கு வாழ்வளித்த இடம் அதனாலும் இந்த பெயர்.
நான் தான் வாழவந்தான்
Posted by
வாழவந்தான்
Monday 20 October, 2008
Labels: வணக்கம்
1 comments:
நல்லா வாழுங்க வாழவந்தான் அவர்களே.
அன்புடன் வாழ்த்தும், கி.பாலு
Post a Comment