இது தேவையா???

6 சாமி!!!!
இது ஒன்னும் சாமி படத்துல வர விக்ரம் பேரு இல்ல.
போன மாசத்துல மட்டும் சேலம் அரசு ஆஸ்பத்திரில அனாதையா விடப்பட்ட கைக்குழந்தை (infant)களின் எண்ணிக்கை!!
இது ஒரு ஆஸ்பத்திரில ஒரு மாசத்துல தெய்வக்குழந்தை ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைனா, சராசரியா தமிழ்நாட்டுல மட்டும் ஒரு மாசத்துல இந்த மாதிரி விடப்பட்ட குழந்தைகள் எவளவோ??.
இந்த செய்தி டிவில வந்தபோது அது பத்தி பேசின ஒரு சமூக ஆர்வலர் சொன்னதை கவனிக்க வேண்டும். இந்த மாதிரி குழந்தைகள் தவறான தொடர்புகளாலும்(பெரும்பாலானவை), குடும்பத்துல இருக்கும் வருமையாலும் கைவிடப்படுகிறார்கள். எனக்கு ஒரு சந்தேகம், ஒரு குழந்தையை வளர்க்க முடியாது என்னும் போது ஏன் பெற்றெடுத்து அனாதையாக்கனும். அதுவும் இப்ப எவ்வளவோ கருத்தடை சாதனங்கள் கிடைக்குது, இருந்தும் ஏன் இந்த நிலைமை. இதுக்கு காரணம் மக்களின் அறியாமையும், பொருமையின்மையும் தான். பொருமையின்மை பத்தி இங்க இன்னும் விரிவா எடுத்து சொன்னா, பதிவின் பின்புல கலர்ல இருகும்கிறதால அதை தவிர்க்கிறேன். ஆனா மக்களின் அறியாமைக்கு முறையான செக்ஸ் கல்வி இல்லாதது தான்.
முறை அற்ற உரவுகளுக்கு அடித்தளம் பள்ளிக் காலத்துலையே ஆரம்பமாகுது. இது கலாச்சார சீர்கேடா? இல்ல இந்த கேள்வி தனி மனித சுதந்திரத்த பாதிக்கு
தா?. இந்த விவகாரத்தை ரொம்ப விவாதிக்க வேண்டாம். ஆனா இந்த மாதிரி(அனாதையாக்கப்படுதல்) பிரச்சனைகளின் ஆரம்பம் பள்ளிகளா இருக்கும்போது அதை தவிர்க்க முறையான செக்ஸ் கல்வியும் அங்கிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இதுல தனி மனித சுதந்திரத்தை பத்தி நான் குறிப்பிட காரணம், செக்ஸ் என்பது இருவர் சம்பந்தபட்ட விஷயமா இருக்கும்போது அதன் விளைவுகள் முனாவதா அதுவும் ஒரு குழந்தையையும் இந்த சமூகத்தையும் பாதிக்ககூடாது.

0 comments: