சங்க இலக்கியத்தால் சீரழியும் தமிழினம்

சமீபத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாரிசான கனிமொழி அவர்கள் 'தேவாரம் திருவாசகம் என கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிரார்கள்' என்னும் கருத்தை கூறியுள்ளார். இது கலைஞரின் வழியில் நாத்திகம் என்ற பேரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவதே ஆகும்.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்:தேவாரம் திருவாசகம் போன்ற நூல்கள் கடைச்சங்கத்தின் பக்தி இலக்கியத்தை சேர்ந்தவை.கனிமொழி அவர்கள் இப்ப சமீபத்தில் சென்னை சங்கமம் என்ற ஒரு கிராமிய கலைவிழா நடதினாங்க. இதற்கு காரணம் கிராமிய கலை வளரனும், தமிழ் மக்கள் எல்லாருக்கும் கலை ஆர்வத்தையும் அறிவையும் ஏற்படுத்தனும்னாங்க.இதே மாதிரி சங்க காலத்துலயே, தமிழ் நாட்டுல சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தான் கடவுள் வழிபாடு இருந்துது. அந்த மாதிரி காலகட்டத்துல இறைவன் எல்லார்க்கும் பொது, இறைவனை அடைய மொழி ஒரு தடையா இருக்க கூடாதென்றும், பக்தியின் மூலம் தமிழுக்கு வளம் சேர்த்த நூல்கள் அவை. தேவாரம், திருவாசகம் இதையெல்லாம் வாழ்க்கைல ஒருமுரையாவது ஒழுங்கா படிச்சு இல்ல பொருள் விளங்க எங்கயாவது கேட்டு தெரிஞ்சுகிடிருந்த இந்த மதிரி ஒரு எம்.பி பேசமாடாங்க.கனிமொழி சொல்றதை பார்த்தா சங்க இலகியங்கள் தான் தமிழன் வாழ்கையை வீணாகியதா??

0 comments: