ஆஸ்கார்

வாழ்த்துக்கள் திரு.ஏ.ஆர்.ரகுமான்

வெற்றிகள் தொடரட்டும்!!!

வரமா? சாபமா??

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
இதில் எனக்கு வள்ளுவர் கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. அது 'தம் மக்கள்'னு சொன்னதுக்கு பதில் அவர் 'மக்கள்'னு மட்டும் சொல்லியிருந்தாலே நல்லா இருந்திருக்கும். எந்த குழந்தையா இருந்தா என்னங்க மழலை சொல் இனிமை தானே? இதை நான் இங்க சொல்ல காரணம் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற சோதனை குழாய் ஜனனங்கள் பற்றி வெளிவந்த செய்திகள்.

நவ 28, 2008 ஹரியானா:
பலராம் ரஜோரிதேவி தம்பதியருக்கு டாக்டர் அனுராக் பிஷோனியின் சிகிச்சையில் சோதனை குழாய் மூலம் குழந்தை பிறந்தது.
டிச 2, 2008 சென்னை:
வேதம் செல்வமேரி தம்பத்கியர் டாக்டர் காமராஜின் சிகிச்சையால் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றனர்.

இதுல என்ன பெரிய அதிசயம் இந்த மாதிரி குழந்தை பொறக்குறது 1978-இல் இருந்து நடக்குதேனு கேக்கலாம்? இங்க, குழந்தை ஆச்சரியமான விஷயம் இல்லை, அதோட அப்பா அம்மா பற்றிய விஷயங்கள் தான் அதிர்ச்சிகரமானவை. பலராம் ரஜோரிதேவி தம்பதியருக்கு வயது 72-70. வேதம் செல்வமேரிக்கு 60-57.
இங்க நாம யோசிக்க வேண்டியது அந்த குழந்தையின் எதிர்காலத்தை தான். இந்தியர்களின் சராசரி ஆயுள் 60-65 தான்,
அப்படி இருக்க 60,70 வயதுகளில் போராடி, லட்சங்களில் செலவழித்து(2-5 லட்சம்), ப்ரெஷர், சுகர் மாத்திரைகளோடு இதற்கும் கொஞ்சம் மாத்திரைகளை உள்ளே தள்ளி, பல இனல்கள் கடந்து வருவதற்க்குபதில் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாமே!. இதற்க்கு செலவழிக்கும் பணம் மற்றும் நேரத்தை அந்த குழந்தைக்கு செலவிடலாமே!. நிற்க, சோதனை குழாய் கருத்தரிப்பிற்கான சாத்தியகூறு சராசரியாக 35%, 45 வயதை கண்டந்தவர்களுக்கு 15% ஆகும்.
CARA(1990-il தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தான் இந்தியாவுல நடக்குற தத்தெடுப்புகளை கண்காணிச்சு முறைப்படுத்துது. இது மத்திய அரசால் அமைக்கப்பட்ட சுயாட்சி(autonomous) அமைப்பு) . CARA அங்கீகரித்த காப்பகங்களே ஒரு வயதிற்கும் கீழ் இருக்கும் குழந்தையயை தத்தெடுக்கும் பெற்றோர் அதிகபட்சம் 45 வயசுதான் இருக்கலாம், 2 வயசு குழந்தையா இருந்தா பெற்றோர் 46 வயசும், 55 வயதை கடந்த தம்பதிகள் தத்தெடுக்க அனுமதி இல்லைனும் விதிமுறைகள் வைத்திருக்கு. இதன்படியோ அல்லது குடும்ப சூழலால் உங்களால் தத்தெடுக்க முடியவில்லையா? ஒரு குழந்தைக்கு ஸ்பான்சராக இருக்கலாமே. பிரான்ஸ் போன்ற நாடுகளில் டெஸ்ட் டியுப் கருத்தரிப்புகளுக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். அதுபோல் நம் நாட்டிலும் சட்டங்கள் தேவை.
இதை நான் குழந்தை இல்லாதவரகளையோ அல்லது மருத்துவர்களையோ குறை கூறும் எண்ணத்தில் எழுதவில்லை. இந்த இரண்டு பிரசவத்திலும் மருத்துவர்களின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. ஒரு தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்றால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதிகமே. ஆனால் இதற்கெல்லாம் தீர்வு நவீன மருத்துவத்தின் மூலம் வாழ்வின் கடைசி காலத்தில் பிள்ளை பெறுவதல்ல. இதன் மூலம் நாம் நன்கு அறிந்து அறிவியல் துணையோடு ஒரு குழந்தையை ஆதரவற்றதாக்குகிறோம். நமக்கு பிள்ளை வேண்டும் என்பதற்காக மருத்துவம் தந்த வரத்தை, நாம் அதன் மூலம் பெற்ற பிள்ளைகளுக்கே சாபமாக்க வேண்டாம்.