ஒரு தரம்! ரெண்டு தரம்!! மூணு தரம்!!!

இந்த வாரம் காந்தியடிகளின் கண்ணாடி, கடிகாரம், இரண்டு பாத்திரங்கள், ஒரு லெட்டர் ஆகியவை ஏலத்திற்கு வந்தன. இதை அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்னும் காந்திபக்தர்(?) ஏலத்தில் தருவதாக அறிவித்தார். இதை தொடருந்து 2007 ஆம் ஆண்டு காந்தியடிகளின் கடிதம் ஒன்று ஏலம் விட இருந்ததை தடுத்து இந்திய அரசே அதை வாங்கியது போல இந்த முறையும் செய்துவிடலாம் என நினைத்து கடைசி நேரத்தில் முயற்சி செய்து பார்த்தது. மார்ச் 4 ஆம் தேதி ஆமதாபாத்தை சேர்ந்த நவஜீவன் நிலையம்(இவர்களே தனது சொத்துகளாக கருதப்படும் அசையும், அசையா பொருட்களுக்கு உரிமை உள்ளவர்கள் என்று காந்தியடிகளே குறிப்பிட்டுள்ளார்) தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த ஏலத்திற்கு தடை விதித்தது.

இந்நிலையில் இந்த பொருட்களின் உடைமையாளர் ஓடிஸ் அவர்களே இவற்றை இந்திய அரசுக்கு தருவதாகவும் அதற்க்கு அரசு தன் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றும் கூறினார். அவர் வைத்த கோரிக்கைகள் 'இந்திய அரசு ஏழைகளின் சுகாதாரத்திற்கு செலவு செய்யும் தொகையை 1% இருந்து 5% ஆகா உயர்த்துதல்' அல்லது 'சுமார் 78 உலக நாடுகளில் காந்தியை பற்றிய நடமாடும் கண்காட்சி அரசு செலவில்'. இந்த கோரிக்கைகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக அரசு ஏற்க மறுத்து, ஏலத்தின் ஆரம்ப தொகையான 20,000 டாலர்களுக்கு அதை வாங்க முன்வந்தது.

ஆனால் ஓடிஸ் இதை மறுக்க, டெல்லி நீதிமன்றத்தின் கீழ் இந்த ஏலம் வராது என கூறி ஏல கம்பனி ஏலத்தை இன்று நடத்தியது. கடைசியில் இதை பொருட்களை வைத்திருந்த ஓடிஸ் தடுத்தும் நடைபெற்றது வேறு கதை. இவ்வளவு சிக்கல்களுக்கு பின் இந்த ஏலத்தில் ஐந்து பொருட்களையும் கிங்க்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா 1.80 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். பின் இந்த பொருட்களை இந்திய அரசிடம் ஒப்படைப்பதாகவும் அறிவித்தார்.
இதை பற்றிய கருத்துகள் நாளை......

0 comments: