இலங்கை போரின் தீவிரம் குறைப்பு(போர் நிறுத்தம் அல்ல)[ஈழமும் இந்திய அரசியலும் பகுதி 3]

பகுதி 1, பகுதி 2 , தொடர்புடைய இலங்கை ராணுவ தளத்தின் சுட்டி
இலங்கையில் விடுதலைபுலிகளுக்கு எதிரான போரின் தீவிரத்தை குறைத்து வான் வழி மற்றும் கனரக ஆயுத போரை நிறுத்திவைப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. எனினும் LTTE வசம் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தரைப்படை தொடர்ந்து ஈடுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையை போர் நிறுத்தமாக தவறாக கருதவேண்டாம் என்றும் கூறியுள்ளது. இதற்குள் இங்கு திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் தமிழக முதல்வர் திரு.கருணாநிதி. பின்னர் இந்த அறிவிப்பையடுத்து சில மணிநேரங்களில் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

இந்த செய்தி இன்று தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட விதம் அருமையானது. அவற்றில் இருந்து சில..
1) இலங்கையில் போர் முடிவுக்குவந்தது. இலங்கையரசு போரை நிறுத்துவதாக அறிவிப்பு.
2) கலைஞரின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து இலங்கை அரசு போரை நிறுத்துவதாக அறிவிப்பு.
3) ஐ.நா, மற்றும் உலக நாடுகளின் வலியுறுத்தலுக்கு பணியாத இலங்கை அரசு தமிழக முதல்வர் கலைஞரின் உண்ணாவிரத போராட்டத்தால் போரை நிறுத்த அறிவித்துள்ளது.

இது காக்கா உக்கார பழம் விழுந்த கதை கூட இல்ல, காக்கா எங்கயோ மேல பறக்க கீழ ஆலமரம் வேரோட சாஞ்ச கதை. தமிழ் கூறும் நல்லுலகம் தசாவதாரம்(கமல் திரைப்படம்[இதை இங்க சொல்லாம விட்டா பச்சை நிற வலைபூவுக்கு காவி ஏறிடிச்சுனுவாங்க] புண்ணியத்துல பட்டர்ப்ளை எபக்டு பற்றி தெரிஞ்சுக்கிடிருபீங்க அது மாதிரி இது கழக மீடியா எபக்டு. சாட்டிலைட்டு சானலுல அரைமணிநேரம் நிகழ்ச்சி வழங்குற லேகிய மருத்துவரே வாய்க்கு வந்ததை அள்ளிவிடும்போது, அந்த சானல் குழுமத்தையே(குடும்பத்தை அல்ல)சொந்தமா வெச்சிருந்தா என்ன எல்லாம் சொல்லலாம்? என்ன சொல்லலாம் இந்த மாதிரி பூசணிக்கா தோட்டத்தையே ஒரு சோத்து பருக்கையில மரச்சிடலாம்.

நீ தமிழின துரோகி, உனக்கு தமிழ் ரத்தமே ஓடல, 85 வயது முதியவரின் அறப்போரை கேலிசெய்யும் பாசிச கோமாளி இப்படியெல்லாம் என்ன திட்டி முடிஞ்சதும் இந்த பாசிச கம்முனாட்டிக்கு சில விஷயம் புரியலை அதை யாரவது பின்னூட்டத்துல விளக்குங்க.
1. செப் 2008 இல் இருந்து பலகட்டங்களா பேரணி, மனித சங்கிலி, அறிக்கை, இரங்கல் கவிதை, ராஜினாமா கடித சேகரிப்பு(சேகரிப்பு-னு குறிப்பிட காரணம் இன்று வரை ஒரு வார்டு கவுன்சிலர் கூட ராஜினாமா பண்ணலை) புள்ளிவிவரம், தீக்குளிப்பு, உண்ணாவிரதம்னு வெரைட்டியா ஸ்டண்டு அடிச்சு இன்ன்னிக்கு இலங்கை அரசா பார்த்து இதுக்கு மேல அங்க அழிக்க ஒண்ணுமில்லைனு ஒஞ்சதுக்கு பின்னாடி என்னாலதான் நின்னுச்சுனு டிவில போட்டுகிட்டா இது அயோக்கியத்தனமா இல்லையா?
2. இந்த செயலை ஒரு நாளைக்கு 70 பேர்னு 8 மாசத்துல சுமார் 15,000 மேற்பட்ட உயிர்கள் போகுறதுக்கு முன்னாடியே ஏன் செய்யலை?
3. 95% LTTE வசமிருந்த பகுதிகளை புடிச்சாச்சு மீதி கொஞ்ச நஞ்ச எடத்துக்கு தரைல ராணுவத்தை முன்னேரசொல்லிட்டு அவங்க தலைலேயே குண்ட போடவேன்னாமேனு இலங்கை ராணுவம் மல்லாக்கா படுத்து துப்பினா மாருல படும்னு சொல்ற கதையா போர் நடவடிக்கையின் தீவிரத்தை குறைச்சா இங்க என்னடானா போரே முடிஞ்சிடுச்சு வெற்றி வெற்றின்னு கூவ ஆரம்பிச்சாச்சு. இது முறையான செய்தி சேகரிப்பு மற்றும் ஒளிபரப்பா இல்லை ஓட்டுபொறுக்கும் நாடகமா.?

என்னடா இவன் இலங்கை பிரச்சனைல தலைவரு மட்டும் நாடமாடுற மாதிரியே சொல்லுரான்னேன்னு பாக்குறீங்களா? தங்க தாரகையை பத்திதான் ஊருக்கே தெரியுமே, மாச ஆரம்பத்துல போருனா பொதுமக்கள் சாவங்கனு சொல்லுவாங்க, தேர்தல் நெருங்கினா தனிஈழம் தான் தீர்வுன்னு சொல்லுவாங்க, அப்பறம் அதை தனிஈழம் இல்லை தமிழ் ஈழம்னுதான் சொன்னேன்னு மாத்துவாங்க, ரெண்டு சீட்டு கூடுதலா ஜெயிக்குற மாதிரி தெரிஞ்சா 'நான் குருவாயூர் கோவிலுக்கு குடுத்த யானையை கூட்டிவந்து ராமர் பாலத்துல இன்னும் கொஞ்சம் மன்னகொட்டி அப்படியே எல்லாரும் இலங்கைக்கு போய் தமிழர்களை காப்பாத்தலாமுன்னு' கூட சொல்வாங்க. ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து தமிழின காவலர கொண்டாபட்ட கலைஞரும் இலங்கை பிரச்னையை சினிமா நடிகை மாதிரி தேர்தல் பிரச்சார/ஒட்டு வேட்டைக்கு பயன்படுத்துறது ரொம்ப கேவலம்பா. எப்படியோ இனி இலங்கையில் சிறிது காலம் ஓரளவு அமைதி திரும்பும், உயிர் பலி குறையும். அரசியல்வியாதிகள் விரைவாக மாற்று ஒட்டு வேட்டையை தேடிக்கொள்க!!

0 comments: