திரு டி. டி. சக்கரவர்த்தி இந்தியாவின் கண்பார்வையற்ற முதலாவது நீதிபதி ஆவார். வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள திமிரி என்ற ஊரைச் சேர்ந்த இவர் தன் நான்கு வயதில் அம்மை நோயால் கண்பார்வையை இழந்தார். வழக்குரைஞர் பட்டம் பெற்ற இவர் துவக்கத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி பெற்றார்.
பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். தமிழக அரசின் மாவட்ட நீதிபதிப் பயிற்சிக்கு தேர்வு பெற்றார்.2008ல் நடந்த தமிழக அரசின் தேர்வாணைய நீதிபதிகள் தேர்வுக்கான தேர்வில் 13-வது இடம் பெற்றார். தமிழ்நாடு மாவட்ட ஜூடிசியல் அகாடமியில் 2 மாதங்கள் பயிற்சி பெற்றார். வால்பாறை நீதிமன்றத்திலும் பயிற்சி நீதிபதியாக இருந்தார். தனது 41 ஆம் வயதில் ஜூன் 2009 இல் கோவை மாவட்ட 3-வது கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் சக்கரவர்த்தி நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நன்றி: விக்கிபீடியா மற்றும் தி ஹிந்து
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா...
Labels: புலன் அறிந்தவை
ஏலம் ஒரு பார்வை
இதில் நீதிமன்றம் கூறியது போல் காந்தியுடன் தொடர்புடைய அனைத்தும் இந்தியாவின் சொத்து என்று கொள்ளமுடியாது ஏனெனில், காந்தி தான் உபோயோகித்த பல பொருட்களை அன்பளிப்புகளாக கொடுத்திருக்கலாம் அது பல மனிதர்களை தாண்டி இன்று ஒருவரிடம் உள்ளது, அவர் அதை விற்க நினைக்கிறார் அவ்வளவே!
இதில் கவலைப்பட ஒன்றும் இல்லை. நவஜீவன் சொல்லுவது போல் அந்த பொருட்கள் நவஜீவநிலிருந்து திருடப்பட்டவை என்பது அபத்தமானதாகும். இது உண்மை என்றால் அவர்கள் மீதம் இருக்கும் பொருட்களையாவது ஒழுங்காக பாதுகாப்பார்களா?
அக்டோபர் 2 சமாதியில் அஞ்சலி, ப்ளாக்கில் மது; எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் விளம்பர ஆதாயம் தேட அடையாள உண்ணாவிரதம் என்ற அளவில் காந்தியின் சிந்தைகளை பின்பற்றும் நாம் அந்த ஏல பொருட்களை வைத்து மட்டும் என்ன செய்ய போகிறோம்?
உடனே நீ இந்தியனா? ஒரு பையன் அவன் அப்பாவின் பொருட்களை நினைவு சின்னமாக பாதுகாக்கவேண்டாமா? இப்படி ஏலம் போறத பார்த்துக்கொண்டிருக்கலாமானு கேனத்தனமா கேள்வி கேக்காதீங்க..எங்க அப்பா பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு மோதிரம் தராரு அதை எங்க அப்பாவின் மறைவுக்கு பின் என் பக்கத்து வீட்டுக்காரரோ இல்லை அவரிடம் இருந்து அதை பெற்ற ஒருவரோ விற்றால் அதை நான் தடுப்பது சரியாகுமா? அவரின் நினைவாக அவர் காட்டிய வழியில் வாழ்வது, அவர் எனக்கென விட்டு சென்ற பொருட்களை அவர் நினைவாக பாதுகாப்தும்தானே சரியாகும். இதை விட்டு எங்க அப்பா உபயோகிச்சது எல்லாம் என்னோடது அத்தை நான்தான் வெச்சுக்குவேன்னு சொல்லமுடியுமா? எங்க அப்ப, மயில் சிம்மாசனம், கோகினூர் வைரம் இந்த மாதிரி பொருட்களை வாங்கிட்டு வரசொல்லுங்களேன்! ஒழுங்கா காந்தி மியுசியம்களில் இருக்கும் பொருட்கள் திருடுபோகாமலும், அவர் சொல்லிய வழிகளை நடைமுறையிலும் பின்பற்றுங்கப்பா!
இதுல விஜய் மல்லையாவை சும்மா சாராய வியாபாரி அவரு எப்படி காந்தி பொருட்களை வாங்கலாம்னு சொல்றதும் சரியில்லை. இவரின் முயற்ச்சியை நல்ல மார்கெடிங் யுத்தி என்ற வகையில் பாராட்டலாம். அவரோட நல்ல என்னத்தை புரிஞ்சுகாதன் நீ அப்படீன்னு சொல்றவங்களுக்கு ஒரு கேள்வி. இப்படி கோடிகளை கொட்டி ஏலம் எடுப்பவர் அதே காசை கொண்டு இந்திய அரசு சார் பெட்ரோல் நிறுவன கடன்களை அடைககலாமா இல்லையா.
இந்த நிலையை என்னிபார்க்கும் போது அனுஜன்யா அவர்களின் இந்த கவிதை தான் நினைவுக்கு வருகிறது...
பிரியமான அப்பாவுடந்தான்
தந்தையர் தினம் செலவழிந்தது
அந்த முதியோர் இல்லத்தில்!
Labels: அரசியல்/சமூகம் , புலன் அறிந்தவை
ஒரு தரம்! ரெண்டு தரம்!! மூணு தரம்!!!
இந்த வாரம் காந்தியடிகளின் கண்ணாடி, கடிகாரம், இரண்டு பாத்திரங்கள், ஒரு லெட்டர் ஆகியவை ஏலத்திற்கு வந்தன. இதை அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்னும் காந்திபக்தர்(?) ஏலத்தில் தருவதாக அறிவித்தார். இதை தொடருந்து 2007 ஆம் ஆண்டு காந்தியடிகளின் கடிதம் ஒன்று ஏலம் விட இருந்ததை தடுத்து இந்திய அரசே அதை வாங்கியது போல இந்த முறையும் செய்துவிடலாம் என நினைத்து கடைசி நேரத்தில் முயற்சி செய்து பார்த்தது. மார்ச் 4 ஆம் தேதி ஆமதாபாத்தை சேர்ந்த நவஜீவன் நிலையம்(இவர்களே தனது சொத்துகளாக கருதப்படும் அசையும், அசையா பொருட்களுக்கு உரிமை உள்ளவர்கள் என்று காந்தியடிகளே குறிப்பிட்டுள்ளார்) தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த ஏலத்திற்கு தடை விதித்தது.
இந்நிலையில் இந்த பொருட்களின் உடைமையாளர் ஓடிஸ் அவர்களே இவற்றை இந்திய அரசுக்கு தருவதாகவும் அதற்க்கு அரசு தன் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றும் கூறினார். அவர் வைத்த கோரிக்கைகள் 'இந்திய அரசு ஏழைகளின் சுகாதாரத்திற்கு செலவு செய்யும் தொகையை 1% இருந்து 5% ஆகா உயர்த்துதல்' அல்லது 'சுமார் 78 உலக நாடுகளில் காந்தியை பற்றிய நடமாடும் கண்காட்சி அரசு செலவில்'. இந்த கோரிக்கைகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக அரசு ஏற்க மறுத்து, ஏலத்தின் ஆரம்ப தொகையான 20,000 டாலர்களுக்கு அதை வாங்க முன்வந்தது.
ஆனால் ஓடிஸ் இதை மறுக்க, டெல்லி நீதிமன்றத்தின் கீழ் இந்த ஏலம் வராது என கூறி ஏல கம்பனி ஏலத்தை இன்று நடத்தியது. கடைசியில் இதை பொருட்களை வைத்திருந்த ஓடிஸ் தடுத்தும் நடைபெற்றது வேறு கதை. இவ்வளவு சிக்கல்களுக்கு பின் இந்த ஏலத்தில் ஐந்து பொருட்களையும் கிங்க்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா 1.80 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். பின் இந்த பொருட்களை இந்திய அரசிடம் ஒப்படைப்பதாகவும் அறிவித்தார்.
இதை பற்றிய கருத்துகள் நாளை......
Labels: அரசியல்/சமூகம் , புலன் அறிந்தவை
தேர்தல் திருவிழா தேதிகள்!!
இந்தியாவின் 15 ஆவது லோக் சபா தேர்தல் தேதி அறிவிச்சுட்டாங்கப்பா!!!ஏப்ரல் 16 முதல் மே 13 வரை 5 கட்ட தேர்தல்..மே 16 வாக்கு எண்ணிக்கை..ஆக, சரியாக ஒரு மாதம் இந்தியாவில் தேர்தல் திருவிழா.
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மே 13 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது
இந்த தேர்தலில் மொத்தம் 714000000 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சுமார் அறுபது லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 8,28,804.
இதில், ஜம்மு, உ.பி யில் ஐந்து கட்டமாகவும்; பீகாரில் நான்கு கட்டமாகவும்; மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தில் மூன்று கட்டமாகவும்; ஆந்திரா, அசாம், கர்நாடகா, ஜார்கண்ட், ம.பி, ஒரிசா, பஞ்சாப் ஆகியவற்றில் இரண்டு கட்டமாகவும்; மற்ற மாநிலம், யூனியன் பிரதேசங்களில் ஒரு கட்டமாகவும் தேர்தல் நடை பெறவுள்ளது.
தேர்தல் தேதிகள் மற்றும் தேர்தல் நடைபெறும் தொகுதி எண்ணிக்கை:
ஏப்ரல் 16 -124 தொகுதி, ஏப்ரல் 22,23 - 141 தொகுதி, ஏப்ரல் 30 - 107 தொகுதி, மே 7 - 85 தொகுதி, மே 13 - 86 தொகுதி. மணிப்பூரில் மட்டும் ஏப்ரல் 23 பதிலாக ஏப்ரல் 22 தேர்தல் நடைபெறும்(ஏப்ரல் 23 மணிப்பூரில் உள்ளூர் விடுமுறை)
Labels: அரசியல்/சமூகம் , புலன் அறிந்தவை
வரமா? சாபமா??
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
இதில் எனக்கு வள்ளுவர் கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. அது 'தம் மக்கள்'னு சொன்னதுக்கு பதில் அவர் 'மக்கள்'னு மட்டும் சொல்லியிருந்தாலே நல்லா இருந்திருக்கும். எந்த குழந்தையா இருந்தா என்னங்க மழலை சொல் இனிமை தானே? இதை நான் இங்க சொல்ல காரணம் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற சோதனை குழாய் ஜனனங்கள் பற்றி வெளிவந்த செய்திகள்.
நவ 28, 2008 ஹரியானா:
பலராம் ரஜோரிதேவி தம்பதியருக்கு டாக்டர் அனுராக் பிஷோனியின் சிகிச்சையில் சோதனை குழாய் மூலம் குழந்தை பிறந்தது.
டிச 2, 2008 சென்னை:
வேதம் செல்வமேரி தம்பத்கியர் டாக்டர் காமராஜின் சிகிச்சையால் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றனர்.
இதுல என்ன பெரிய அதிசயம் இந்த மாதிரி குழந்தை பொறக்குறது 1978-இல் இருந்து நடக்குதேனு கேக்கலாம்? இங்க, குழந்தை ஆச்சரியமான விஷயம் இல்லை, அதோட அப்பா அம்மா பற்றிய விஷயங்கள் தான் அதிர்ச்சிகரமானவை. பலராம் ரஜோரிதேவி தம்பதியருக்கு வயது 72-70. வேதம் செல்வமேரிக்கு 60-57.
இங்க நாம யோசிக்க வேண்டியது அந்த குழந்தையின் எதிர்காலத்தை தான். இந்தியர்களின் சராசரி ஆயுள் 60-65 தான்,
அப்படி இருக்க 60,70 வயதுகளில் போராடி, லட்சங்களில் செலவழித்து(2-5 லட்சம்), ப்ரெஷர், சுகர் மாத்திரைகளோடு இதற்கும் கொஞ்சம் மாத்திரைகளை உள்ளே தள்ளி, பல இனல்கள் கடந்து வருவதற்க்குபதில் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாமே!. இதற்க்கு செலவழிக்கும் பணம் மற்றும் நேரத்தை அந்த குழந்தைக்கு செலவிடலாமே!. நிற்க, சோதனை குழாய் கருத்தரிப்பிற்கான சாத்தியகூறு சராசரியாக 35%, 45 வயதை கண்டந்தவர்களுக்கு 15% ஆகும்.
CARA(1990-il தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தான் இந்தியாவுல நடக்குற தத்தெடுப்புகளை கண்காணிச்சு முறைப்படுத்துது. இது மத்திய அரசால் அமைக்கப்பட்ட சுயாட்சி(autonomous) அமைப்பு) . CARA அங்கீகரித்த காப்பகங்களே ஒரு வயதிற்கும் கீழ் இருக்கும் குழந்தையயை தத்தெடுக்கும் பெற்றோர் அதிகபட்சம் 45 வயசுதான் இருக்கலாம், 2 வயசு குழந்தையா இருந்தா பெற்றோர் 46 வயசும், 55 வயதை கடந்த தம்பதிகள் தத்தெடுக்க அனுமதி இல்லைனும் விதிமுறைகள் வைத்திருக்கு. இதன்படியோ அல்லது குடும்ப சூழலால் உங்களால் தத்தெடுக்க முடியவில்லையா? ஒரு குழந்தைக்கு ஸ்பான்சராக இருக்கலாமே. பிரான்ஸ் போன்ற நாடுகளில் டெஸ்ட் டியுப் கருத்தரிப்புகளுக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். அதுபோல் நம் நாட்டிலும் சட்டங்கள் தேவை.
இதை நான் குழந்தை இல்லாதவரகளையோ அல்லது மருத்துவர்களையோ குறை கூறும் எண்ணத்தில் எழுதவில்லை. இந்த இரண்டு பிரசவத்திலும் மருத்துவர்களின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. ஒரு தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்றால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதிகமே. ஆனால் இதற்கெல்லாம் தீர்வு நவீன மருத்துவத்தின் மூலம் வாழ்வின் கடைசி காலத்தில் பிள்ளை பெறுவதல்ல. இதன் மூலம் நாம் நன்கு அறிந்து அறிவியல் துணையோடு ஒரு குழந்தையை ஆதரவற்றதாக்குகிறோம். நமக்கு பிள்ளை வேண்டும் என்பதற்காக மருத்துவம் தந்த வரத்தை, நாம் அதன் மூலம் பெற்ற பிள்ளைகளுக்கே சாபமாக்க வேண்டாம்.
Labels: அரசியல்/சமூகம் , புலன் அறிந்தவை
புலி வால்
Labels: புலன் அறிந்தவை
கல்வி - வியாபாரமா? விபரீதமா??
'சாமி' போல் போலீசிலிருந்து பொறுக்கியாகி, புரட்சித்தலைவரின் பாதுகாவலருமாகி, இன்று கல்வித் தந்தை(??) ஆகிவிட்டவரின் பல்கலைகழகத்தில் நடந்த சம்பவம். பராமரிப்பு பணிகளுக்கு பின் சரியாக மூடப்படாத மின்சார கம்பி 'நிஷாவின்' அருளால் வெளிவர, மின்சாரம் தாக்கி கிருஷ்ண்கிரியை சேர்ந்த பிரசாத் குமார் என்ற முதலாம் ஆண்டு எஞ்சினீரிங் மாணவர் பலியானார். இது நிர்வாகத்தின் கவனகுறைவால் ஏற்பட்டதென்று மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதாகவோ, நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. சென்னை புறநகரில் உள்ள இதே யுனிவர்ஸிடியில் சில வாரங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவரை ஆஸ்பிடலில் சேர்க்க பல்கலை நிர்வாகம் மறுக்க, மாணவர்கள் போராடி அவனை மருத்துவமணைக்கு அனுப்பியுள்ளனர்.
பல கனவுகளுடன் சில லட்சங்களை(7 லட்சம்)கொடுத்து எஞ்சினீரிங் சேர்த்து, மகனையே பறிகொடுத்து நிற்கும் பெற்றோருக்கு பல்கலை நிர்வாகத்தின் பதில் என்ன?? இதுபோன்ற நிர்வாகத்தால் இன்று கல்வி வியாபாரமல்ல அதையும் தாண்டி விபரீதமாகி வருகிறது!!!
Labels: அரசியல்/சமூகம் , புலன் அறிந்தவை
வசூல்ராஜாக்களும் 500 ரூபாயும்
தமிழகத்தில் மட்டும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வராமலிருக்கும் வசூல்ராஜாக்கள் 30%. இதை தடுக்க வரும் 2009-ல் இருந்து அரசு மருத்துவமணைகளில் மருத்துவர்கள் தங்கள் வருகை மற்றும் பணிமுடிந்து திரும்பும் நேரத்தையும் குறிப்பிடவும், தேவைப்பட்டால் கைரேகை மூலம் இதை பதிவு செய்யும் பையோ அட்டெண்டன்ஸ் முறை அமுலக்கப்படும் என்று தமிழக மருத்துவ கவுன்ஸில் தலைவர் டாக்டர்.விநாயகம் தெரிவித்துள்ளார். இது நடைமுறையாகும் என நம்புவோமாக!!
சென்னை நகர மருத்துவர் சங்க தலைவர் 'இப்படி அட்டெண்டன்ஸ் முறைகள் திருத்துஅமைக்கப்பட்டால் மருத்துவர்களுக்கு சம்பள உயர்வும் தேவைனு சொல்லியிருக்காரு. அது சரி சம்பளத்துக்கு பார்க்கவேண்டிய வேலையையே லஞ்சம் கொடுத்து பார்க்கவைக்க வேண்டிய நிலமைலதானே இருக்கோம்!!
500 ரூபாய்!!! இது ஒரு அரசு மருத்துவமணையின் தலைமை மருத்துவர்(டீன்) அந்த மருத்துவமணைக்கு அத்தியாவசிய மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்க நாள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் தொகை. இதை வைத்து பாண்டேஜ் வாங்க முடிந்தாலே பெரிய விஷயம். இது போன்ற முரண்பாடுகள் இருக்க காரணம் மருத்துவ கவுன்ஸிலின் விதிமுறைகள்(ஸ்டாண்டிங் ஆர்டர்)1956ஆம் அண்டு திருதியமக்கப்பட்டதென்றும், இதில் சில 1930களில் ஏற்படுத்தப்பட்டவை என்றும் தெருவிதுள்ள திரு.வினாயகம், இதில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் டீன், மற்றும் துறைத்தலைவர்களுக்கு மருத்துவமணையின் வளர்ச்சிகும், புதிய ஆராய்சிகளுக்கும் தேவையான கூடுதல் அதிகாரம் மற்றும் நிதி அளிக்க வழிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Labels: புலன் அறிந்தவை
உலக மாற்றுத்திறன் படைத்தோர் தினம்
Disabled in city help blind in US
it into a word document and runs a spell check. After the pages are laid out, the file goes to Ambika, who checks each word against the original German. For the past two months, six disabled girls at the Worth Trust in Chennai have been scanning and uploading books for Bookshare, a US-based project that makes books available to blind people. From Allan Massie's 'Tiberius' and 'The Selected Poems of Rainer Maria Rilke' to pulp fiction and mushy romances, the six girls with orthopaedic disabilities work in the Trust's office in KK Nagar, scanning, proof-reading and uploading books. "The work is not hard but we need to concentrate," says Ilavarasi. The seventh member of the team is Vishal, a visually-impaired MA Literature student, who works from home. The trust sends him finished books, and he uses a voice synthesiser software to listen to the book. They upload about 160 books a month. If there are pictures on the page, they write a brief description that will help the blind person imagine it. Bookshare is an online library for the blind, visually impaired and people with reading disabilities in the US. Apart from 37,000 books, they have about 1,50,000 newspapers
and periodicals online. "It's like amazon.com for the blind," says James R Fruchterman, CEO of Benetech, the non-profit that created bookshare.org. "A blind person can download and read any book using voice synthesiser software." The website provides free voice software, developed by Benetech. Bookshare.org will be available in India soon. The subscription will be Rs 400 for a year, inclusive of the software download. "At present, East West and Katha are the only Indian publishers who have agreed to make their books available. We're looking to scan and upload books in Tamil and other languages," says James. The uploading of Tamil books will be done through Worth Trust, but Venkataraman, who heads the Chennai office, is planning to have Tamil books typed rather than scanned as it will provide more jobs for the disabled. "If we type, we can provide jobs for students from our in-house typing course. The idea is to make the disabled self-sufficient and self-confident."
Labels: புலன் அறிந்தவை
டாக்டர் எத்தனை டாக்டரடி
ஹிதேந்திரன் - இந்த பெயரை தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புவோமாக. சில வாரங்களுக்கு முன்பு சாலை விபத்தால் மூளை சாவை சாந்தித்த 16வயது ஹிதேந்திரனின் உடல் உறுப்புக்களை அவனது பெற்றோர்(அசோகன், புஷ்பாஞ்சலி - இருவரும் மருத்துவர்கள்) தானம் செய்தனர். இதை தொடருந்து ஏற்பட்ட விழிப்புணர்வால் உடல் உறுப்புக்களை தானம் செய்வது பெருகிவருகிறது. இதற்கு அரசும் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல முயற்சிகளை செய்துவருகிறது.
இதை நான் இங்கு குறிப்பிட காரணங்கள் சில.. கரூர் மாவட்டத்தை சேர்ந்த மருதை என்னும் தச்சு தொழிலாளியின் மனைவி சாந்தி என்பவர் மூளைச்சாவை சந்தித்தார், இதை தொடருந்து அவரது 14 வயது மகன் சுரேஷின் தூண்டுதலில் சாந்தியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன(அல்லது வழங்கப்படவுள்ளன). இதன் தொடர்ச்சியாக என் நினைவுக்கு வரும் இரு வேறு சம்பவங்கள்... சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ராஜாராம்-கவிதா தம்பதியர் தமது 5வயது மகன் நவீனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதில் எனக்கு மாற்று கருத்துகள் உண்டு. நவீனுக்கு முளை செயல்திறன் குறைவே அன்றி மூளைச்சாவு ஏற்படவில்லை. பொருளாதார பிரச்சனைகளுக்கு உறுப்பு தானம் தீர்வாகதே!!. இதை தவிர்த்து நவீனை அரசு அல்லது தனியார் காப்பகங்கள் வளர்க்கலாமே!!!
/// கின்னஸ்(??) திலீபன் பெற்றோருடன்///

சம்பவம் இரண்டு...
சென்ற ஆண்டு ஜூன் மாதம் மணப்பாறையை சேர்ந்த டாக்டர் தம்பதி முருகேசன் காந்திமதியின் தவப்புதல்வன் திலீப் என்னும் 15வயது சிறுவன் கின்னஸ் சாதனைக்காக சிஸேரியன் ஆப்பரேஷன் செய்து சர்ச்சைக்குள்ளானது நினைவிறுக்கிறதா??. இது கின்னஸில் இடம்பிடித்ததோ இல்லையோ, சிறுவன் சீர்திருத்தப்பள்ளி சென்றதே மிச்சம். இதில் மேலும் அதிர்ச்சி தரும் செய்தி அந்த டாக்டர் தம்பதியர் தங்களின் ஓராண்டு தடை நீங்கி மருத்துவ சேவையை(???) சமீபத்தில் தொடர ஆரம்பித்தனர். இதனால் எத்தனை உயிர்கள் ஊசலாட உள்ளதோ??
கவனிக்க: ஹிதேந்திரன், திலீபன் இருவரின் பெற்றோரும் மருத்துவர்களே!!!
கொசுறு:
ஐயா உங்கள் சாதனை சோதனைகளுக்கான விலை மற்றவர் உயிர் அல்ல!!
Labels: அரசியல்/சமூகம் , புலன் அறிந்தவை
என் தோழி... என் காதலி... என் மனைவி...
தமிழோவியம் இணைய இதழில் வெளிவந்ததாக வினையூக்கி வலைப்பதிவில் நான் படித்த இடுகை..
(பட்டணப்பிரவேசத்தின் முதல் காப்பி பேஸ்ட் :-))
அலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் மனைவியாக இருந்தாலும் கைநீட்டக்கூடாது என கொள்கை வைத்திருப்பதால் அதைச்செய்யவில்லை.. நான் கல்லூரிக்காலங்கள் எட்டும் வரை என் அம்மாவை கைநீட்டி அடிக்கும் பழக்கத்தை விடாத என் அப்பாவினால், நான் எடுத்த முடிவு எனக்கென வரும் பெண்ணிடம் எந்த விதத்திலும் உடல் ரீதியான வன்முறைகளைப் பிரயோகிக்கக் கூடது என்பது தான். இந்த விசயத்தில், ஜெனியை கல்லூரி கணிப்பொறி ஆய்வகத்தில் நான்கு பேர் மத்தியில் வைத்து அறைந்ததில் சறுக்கி இருக்கிறேன். அந்த அறைக்காக நான் கொடுத்த விலை அதிகம், நல்ல வாழ்க்கைத் துணையாக வந்து இருக்கக்கூடியவளை, தோழி என்ற நிலையிலும் இழந்ததுதான் இன்று வரையில் நான் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் விசயம்.கீர்த்தனாவை நான் காதலித்த காலங்களிலும் சரி, திருமணம் ஆகி இந்த நான்கு வருடங்களிலும் சரி ஒரு முறையேனும் கடிந்து கூடப் பேசியது இல்லை. நான் இப்படி மனதில் பொரிந்து கொண்டிருக்கக் காரணம், காலையில் கீர்த்தனா அஞ்சலிபாப்பாவை கண்மண் தெரியாமல் அடித்ததுதான். . மூன்று வயதுக்குழந்தை குடிக்க கொடுத்த காம்ப்ளானை எங்க வீட்டின் வெளியே இருக்கும் தென்னைமரத்தின் கீழே பாதியைக் கொட்டிவிட்டு என்னிடம் வந்து "அப்பா, கோக்கநெட் டிரீ இன்னும் ஹைட்டா வளரும்பா" சொன்னது தான் தாமதம், வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு நகத்தைக் கடித்துகொண்டிருந்தவள் அஞ்சலிப்பாப்பவை இழுத்து "ஏண்டி , கஷ்டப்பட்டு உனக்கு காம்ப்ளான் வச்சுக்கொடுத்தா,கீழேயா கொட்டுற, திமிருடி உனக்கு" என சொல்லிவிட்டு பிஞ்சுக் குழந்தையின் கன்னத்திலும் முதுகிலும் தொடர்ந்து அடித்த பொழுது "அம்மு, ஏம்மா குழந்தையை அடிக்கிறே" நான் விலக்கிய பின்னரும் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தாள்.சில நிமிடங்களுக்கு முன்னர் வரை மழலையாய் இருந்த அஞ்சலிப்பாப்பாவின் முகம் வாடி, மிரண்டு போய் இருந்தது. கீர்த்தனாவின் கோபத்திற்கு உண்மையான காரணம் காம்ப்ளானைக் கீழேகொட்டியது அல்ல, இன்று இரவு ரம்யாவின் வீட்டிற்கு விருந்திற்கு குடும்பத்துடன் போகவேண்டும் எனக்கேட்டததற்காகத்தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது எனக்குப்புரிந்தது.ரம்யா என்னால் ஒருதலையாகக் காதலிக்கப்பட்டவள். ரம்யா என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என உறுதியாகத் தெரிந்த காலங்களில் தான் கீர்த்தனாவின் அறிமுகம், நேசம், எல்லாம் கிடைத்தது. கீர்த்தனாவிடம் எதையும் மறைத்ததில்லை. ஜெனி முதல் ரம்யா வரை எனது அனைத்து விருப்பங்களும் அவளுக்குத்தெரியும். ஜெனி பற்றி பேசினால் கூட பொறுமையாய் கேட்பவள், ஆனால் ரம்யா பற்றி பேசினால் எப்படியாவது பேச்சை மாற்றிவிடுவாள். என்னதான் பிடிக்காமல் இருந்தாலும் ரம்யாவைப்போய் பார்க்க தான் வரவில்லை அல்லது நானும் போகக்கூடாது என நேரிடையாகச் சொல்லி இருக்கலாம்,ஆனால் அதைவிட்டு பிஞ்சு குழந்தையிடம் அவளது கோபத்தைக் காட்டியது எனக்கு வெறுப்பாக இருந்தது.அலுவலகம் வரும் முன் கீர்த்தனாவிடம் "இன்னக்கி சாயந்திரம் ரம்யா வீட்டுக்கு போகவேனாமுன்னா சொல்லிடு நானும் போகல, உன்னையும் கூட்டிட்டுப்போகல, அவள் மேல இருக்கிற கோபத்தை என் குழந்தை மேல காட்டாதே!!" நிதானமாக சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி வந்தெ வேலையில் மனது ஓடாமல் குட்டிப்பாப்பாவுடன் பேச, வீட்டிற்கு அலுவலகத் தொலைபேசியில் இருந்து அழைத்தேன்."பாப்பா என்ன பண்ணிட்டு இருக்கா?" எனக்கு கீர்த்தனாவின் மேல் கோபம் இருந்தால் அம்மு என விளிப்பதை தவிர்த்துவிடுவேன். அது அவளுக்கும் புரியும். கோபத்தைக் காட்டுவதில் இதுவும் ஒரு வகை."தூங்கிட்டு இருக்கா""லஞ்ச் சாப்பிட்டாளா? திரும்ப அடிச்சியா?""சாப்பாடு ஊட்டி விட்டுட்டுதான் தூங்க வச்சேன், அடிக்கல கார்த்தி" சிறிய மௌனத்திற்குப்பின் "சாரி கார்த்தி" என சொன்னபோது குரல் உடைந்திருந்தது. அழுதிருப்பாள் போலும். இருந்தாலும் கீர்த்தனாவின் மேல் இருந்த கோபம் குறையவில்லை.அவள் "சாரி." சொல்லி முடிக்கும் முன்னரே தொலைபேசியை வைத்தேன்."கார்த்தி, காப்பி போலாமா?" எனது மேலாளர் மோகனின் குரல் கேட்டது.காப்பிக்குடிக்க எங்களது அலுவலகத்தின் மேற்தளத்திற்கு சென்றபொழுது, அவரிடம் காலையில் நடந்த பிரச்சினையை சொன்னேன்."பளார்னு ஒரு அறை விட்டிருக்கனும் சார், பிசிக்கலா வயலன்ஸ் கூடாதுன்னு விட்டுட்டேன்"மோகன் சிரித்தபடி "கார்த்தி, வயலன்ஸ் எந்த ஃபார்ம்ல இருந்தாலும் தப்புதான், வார்த்தைகளில் இ்ருக்கும் வயலன்ஸ் பிசிக்கல் வயலன்ஸை விட குரூரமானது, நீ ரம்யா வீட்டிற்குப்போறதைப் பத்தி கீர்த்தனா கிட்ட டிஸ்கஸ் பண்ணியா, இல்லை போலாம்னு இன்பார்ம் பண்ணியா?"மோகன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை."நாம நிறைய சமயங்களில், கோபப்படுவதில்லை, சாத்வீகமா இருக்கோம்னு நினைச்சுக்கிட்டு, நம்மளை அறியாமல் கூட இருக்கிறவங்களைக் டிப்லோமெடிக்கா பேசுறோம்னு வார்த்தைகளில் காயப்படுத்திடுறோம், இதுக்கு முன்னாடி கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதே இல்லையா?""வாலுத்தனம் நிறைய செஞ்சா அடிப்பாள்""உன்னோட கோபத்திற்கு காரணம், கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதை விட, ரம்யா வீட்டுக்கு முழுமனசோடு வர விருப்பம் இல்லைன்னு நீ நினைச்சதுதான்""ம்ம்ம்ம்""வாழ்க்கைல எல்லா விசயமும் ப்ரியாரிட்டி தான் கார்த்தி, உனக்கு ரம்யாவோட நட்பு முக்கியமா இருக்கலாம், ஆனால் அதைவிட கீர்த்தனாவை நீ புரிஞ்சுக்கிறது முக்கியம்..... அதிக முக்கியத்துவம் இல்லாத விசயங்களுக்காகத்தான் நாம அற்புதமான உறவுகளை கஷ்டப்படுத்திடுறோம்."பேசிக்கொண்டே எங்கள் இடத்திற்கு வந்தபின் மோகனிடம் "எனக்கு டு ஹவர்ஸ் பர்மிஷன் வேணும்""ம்ம்ம்ம் எடுத்துக்கோ"மோகனிடன் விடைபெற்றுக்கொண்டு, வீட்டிற்கு வந்த பொழுது கீர்த்தனாவும் அஞ்சலிப்பாப்பாவும் அழகான உடைகளில் தயாராகி இருந்தனர். காலையில் ஒன்றுமே நடக்காதது போல அம்மாவும் பிள்ளையும் விளையாடிக்கொண்டிருந்தனர்."என்னோட ரெண்டு தேவதைகளும் ரெடியா ஆயிட்டிங்களா." சொல்லியபடி குழந்தையைத் தூக்கி கொஞ்சிகொண்டே "அப்பா, போய் ரெண்டு நிமிசத்துல ரெடியாயிட்டு வருவேனாம்..அப்புறம் கிளம்புவோமாம்"நானும் வேறு உடைமாற்றிக்கொண்டு நான் காரின் முன்பகுதியில் அமர்ந்து, காரின் பின் இருக்கையைப் பார்க்கும் கண்ணாடியில் என் தேவதைகள் தெரியும்படி சரி செய்தேன். கண்ணாடியில் கீர்த்தனா "சாரி" சொன்னாள். கீர்த்தனாவின் கோபம் பனிபோல... சடுதியில் மறைந்துவிடும்."கார்த்தி, ரம்யா வீடு வடபழனி தானே,,, நீ ரைட் எடுக்காம லெஃப்ட் எடுக்கிற""அம்மு, நாம இப்போ பீச் போறோமாம், பின்ன ஸ்ரீகிருஷ்ணால டின்னர் சாப்பிடுறோமாம்..இது மட்டும்தான் இன்னக்கி அஜெண்டா"கண்ணாடியில் சிரித்தபடியே சொன்ன "தாங்க்ஸ் அண்ட் மீ டூ " என சொல்லிக் கண்ணடித்தாள், மனதில் ரம்யாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, வாழ்க்கையின் சில முன்னுரிமைகளைப் புரிந்து கொண்டபடியே கடற்கரையில் வண்டியை நிறுத்தினேன்.
Labels: கதை கதையாம் , புலன் அறிந்தவை
மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸ்
கடந்த செவ்வாய் என் திருவாய் கண்டதையும் தின்ற பலனாய் தூக்கம் வரலை. பெட்ரூம்ல என் ரூம்மெட்(நான் என்-திராயன் எழுத காரணமானவன் ) 'அழகன்' படத்தில் வரும் 'என் வீட்டில்....' பாட்டு ரேஞ்சுக்கு மொபைல்ல பேசிக்கிட்டிருந்தான். 12மணி தாண்டியும் அவன் ஓயாததால அவன் கிட்ட இருந்து தப்பிக்க எஃப்.எம் கேக்க ஆரம்பிச்சேன்.
அப்ப செம சூடான ஒரு எஃப்.எம்ல லவ் டாக்டர் ஒருத்தரு பேசிக்கிடிருந்தாங்க... அவங்க இன்னிக்கு நம்ம கிட்ட மிஸ்.எக்ஸ் பேசவந்திருக்காங்க, அவங்க கிட்ட பேசுரதுக்கு முன்னாடி ஒரு பாட்டு கேளுங்கனு ரெண்டு பாட்டு போட்டாங்க. சரி ரொம்ப நல்ல்வங்களா இருகங்களேனு நானும் பாட்டு முடிஞ்சு நிகழ்ச்சிய தொடருந்து கேட்டேன்.
அந்த மிஸ்.எக்ஸ் அவங்கள பத்தி ஒரு சிறுகுறிப்பு(சுமார் 3நிமிஷம்)சொன்னாங்க. உடனே நம்ம லவ் டாக்டரு யாருக்கெல்லாம் மிஸ்.எக்ஸ புடிசிருக்கோ உடனே உங்க மொபைல எடுத்து ஒரு 5டிஜிட்(இப்ப எல்லாம் டிவி, ரேடியோ இதுக்கெல்லாம் விளம்பரத்தை விட இந்த எஸ்.எம்.எஸ் தான் அதிக வருமானம் தருதோ?) எண்ணுக்கு மெசேஜ் அனுப்புங்க, பிறகு நீங்க மிஸ்.எக்ஸோட பிரெண்டு புடிசிக்கலாம் அப்படினாங்க. 'ஆகா இது.. அது இல்ல..' அப்படினு நான் கொஞ்சம் ஷாக்காகி முடிக்கிறதுக்குள்ள இன்னும் ரெண்டு பாட்டு ஓவர். அப்பறமா கொஞ்சம் கொஞ்சம் பாட்டுக்கு நடுவுல மிஸ்.எக்ஸ் அவங்களோட கனவு கண்ணன் பத்தி சொன்னாங்க. அது என் கிரெடிட் கார்ட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ விட பயங்கரமா இருந்துது.
இவங்க சொல்லி முடிச்சதும் லவ் டாக்டரு ஒரு அருமையான கருத்து சொன்னாங்க மிஸ்.எக்ஸ் ஒரு கிளாசிக்கல் டான்சர் அதனால மிஸ்டர்.எக்ஸ் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாம். அப்படி பார்த்தா பத்மா சுப்ரமனியம் மாதிரி டான்சர் பின்னாடி ஒரு எக்ஸ் கூட்டமே அலையனும். அடப்பாவிகளா கலைய கொலை ஆக்கிட்டீங்களே!!
மணி 12.45 ஆச்சு.. நம்ம லவ் டாக்டரு மிஸ்.எக்ஸ்க்கு வாழ்த்தெல்லாம் சொல்லி முடிச்சாங்க. சரி இதோட இந்த காமெடி டைம் முடிஞ்சுதுனு நினைச்சேன். ஆனா அப்பதான் அந்த பயங்கரம்... லவ் டாக்டரு சொன்னாங்க "வாங்க நம்ம போன வாரம் பேசின மிஸ்டர்.எக்ஸ்கு கனவு கன்னி கிடைச்சாங்க்களானு பார்ப்போம்னு" சொல்லி 3 விளம்பரத்தை ஓட்டி விட்டாங்க. பின்னர் ஒருத்தருக்கு போன் பண்ணினா, அந்த் பக்கம் ஒரு மிஸ்டர்.எக்ஸ் தூக்க கலக்கத்துல "எனக்கு இன்னும் கனவு கன்னி கிடைக்கல.. நான் சொன்னேன்ல எனக்கு கிடைகாதுனு.." இப்படி சொன்னதையே சொல்லிட்டிருந்தாரா... நம்ம லவ் டாக்டரு உடனே "இல்ல எக்ஸ் நீங்க ரொம்ப லக்கி உங்களுக்காக ஒரு மிஸ் காத்துகிடிருக்காங்க. அவங்க கிட்ட பேசுங்க" அப்படினு ஒரு மிஸ்.எக்ஸ்கு போன் பண்ணினாங்க. அப்ப ஒரு மிஸ்.எக்ஸ் எக்கச்ச்க்க வெக்கத்தோட மிஸ்டர்.எக்ஸ் கிட்ட பேசினாங்க. மிஸ்டர் எக்ஸ ஏன் புடிக்கும்னு அபத்தமா(தெய்வீகமா?) ஒரு காரணத்தையும் சொன்னாங்க. அதுல நம்ம மிஸ்டர்.எக்ஸ் அப்படியே கரைஞ்சுபோய்டாரு. கடைசியா லவ் டாக்டரு மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸோட பேர சொல்லி, அவங்க உறவு பலமா இருக்க வாழ்த, மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸ் சிரிக்க, இப்படியும் ஒரு நிகழ்சிய தூங்காம கேட்ட என்ன நினைச்சு நானே சிரிப்பா சிரிக்க நிகழ்சி முடிஞ்சிது.
இப்படியே போனா லெட்டர் காதல், போன் காதல், பாத்து காதல், பாக்காத காதல், இண்டெர்னெட் காதல் இந்த வரிசையில் ரேடியோ காதலை வைத்து ஒரு தமிழ் சினிமாவும், சில கொலை, தற்கொலைகளை செய்தியாவும் பாக்கலாம்.
பி.கு: இன்னும் எஸ்.எஸ் இன் போன் கால் முடியவில்லை.... (அவன் ஒரு தொடர்கதை!!!)
Labels: புலன் அறிந்தவை
பட்ட கல்லில் படும்
நேற்று இரவு ஆபீஸ் முடிந்து வீடு திரும்ப பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தேன். வானிலை அறிக்கை உண்மை என்பது போல மழை கொட்டத தொடங்கியது. ரோட்டை பிறிக்க சென்னை போக்குவரத்து காவலால் போடப்பட்ட கற்கள் மூழ்க ஆரம்பித்தன. அப்போது அந்த வழி வந்த சென்னை சாலைகளின் செல்லப்பிள்ளை(ஆட்டோ) முன்னால் சென்ற இன்னொரு பிள்ளையை முந்தப்பார்து மூழ்கிய கற்களில் மோதி ஒரு கல்லை உடைத்ததோடு தன் ஒரு காலையும் இழந்து நொண்டியபடியே சென்றது. அடுத்த சில நொடிகளில் புயலாய் வந்த பஸ் ஒன்று தன் பங்குக்கு மூன்று கற்களை பதம்பாற்து அதே வேகத்தில் மறைந்தது. இதில் சிதறிய ஒரு கல் மேல் குட்டி யானை(லோடு ஆட்டோ)ஒன்று லேசக மோதி இன்னும் கொஞ்சம் நடுரோட்டிற்கு தள்ளி விட டூ-வீலரில் வந்த ஒருவரின் காலில் காயம் ஏற்படுத்திய பிறகு, அந்த டூ-வீலர் ஆசாமி, மற்றும் சில நல்ல உள்ள்கங்களின் முயற்சசியால் கற்கள் எல்லாம் மீண்டும் பழைய நிலையான மூழ்கிய நிலையில் அதே இடத்தில் வைக்கப்பட்டன.
இதற்குள் பஸ் வந்துவிட, அதன் தொடர்ச்சியை பார்க்க முடிய வில்லை. ஆனால் பஸ்ஸின் ஜன்னல் வழி பார்த்தபோது முதல் பிள்ளையை போல் மீண்டும் ஒரு பிள்ளை வைப்பர்(மழை நீர் துடைப்பான்????) இல்லாமல் எதிர்திசையில் சென்றது.
Labels: புலன் அறிந்தவை
ஆடாத ஆட்டமெல்லாம்
விஜய் டிவி யின் புண்ணியத்தால் தமிழ் கூறும் நல்உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது பல்சுவை ஆடல்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள். இது மெல்ல எல்லா சாட்லைட் டிவி களிலும் (ஆ )ரம்பமகிவிடது. இதில் ஆடுவதை விட அழுவதற்கு பரிசுகள் அதிகமோ? ஒரு எபிசொடிற்கு மூன்று விளம்பர இடைவேளை என்பதுபோல் இருவர் கட்டாயம் அழவேண்டும், அதுவும் அவர்கள் இருவரும் ஜோடியாக ஆடுபவர்கள் என்றால் ஆகா, சொல்ல வரதில்லை. நம்ம மக்கள் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்படாத மின் துண்டிப்பு எலாம் தாண்டி நெடுந்தொடருபார்த்து வாழ்கை முழுக்க அழ பழகியதால் நடன நிகழ்ச்சிக்கும் அழுகை தேவையோ? இப்படியே போனா காமெடி நிகழ்ச்சில கூட கண் கலங்கும் சோக காட்சிகள் தேவை படலாம்.
Labels: சினிமா/டிவி , புலன் அறிந்தவை