பூத்தது புத்தாண்டு


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

கல்வி - வியாபாரமா? விபரீதமா??

'சாமி' போல் போலீசிலிருந்து பொறுக்கியாகி, புரட்சித்தலைவரின் பாதுகாவலருமாகி, இன்று கல்வித் தந்தை(??) ஆகிவிட்டவரின் பல்கலைகழகத்தில் நடந்த சம்பவம். பராமரிப்பு பணிகளுக்கு பின் சரியாக மூடப்படாத மின்சார கம்பி 'நிஷாவின்' அருளால் வெளிவர, மின்சாரம் தாக்கி கிருஷ்ண்கிரியை சேர்ந்த பிரசாத் குமார் என்ற முதலாம் ஆண்டு எஞ்சினீரிங் மாணவர் பலியானார். இது நிர்வாகத்தின் கவனகுறைவால் ஏற்பட்டதென்று மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதாகவோ, நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. சென்னை புறநகரில் உள்ள இதே யுனிவர்ஸிடியில் சில வாரங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவரை ஆஸ்பிடலில் சேர்க்க பல்கலை நிர்வாகம் மறுக்க, மாணவர்கள் போராடி அவனை மருத்துவமணைக்கு அனுப்பியுள்ளனர்.
பல கனவுகளுடன் சில லட்சங்களை(7 லட்சம்)கொடுத்து எஞ்சினீரிங் சேர்த்து, மகனையே பறிகொடுத்து நிற்கும் பெற்றோருக்கு பல்கலை நிர்வாகத்தின் பதில் என்ன?? இதுபோன்ற நிர்வாகத்தால் இன்று கல்வி வியாபாரமல்ல அதையும் தாண்டி விபரீதமாகி வருகிறது!!!

வசூல்ராஜாக்களும் 500 ரூபாயும்

தமிழகத்தில் மட்டும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வராமலிருக்கும் வசூல்ராஜாக்கள் 30%. இதை தடுக்க வரும் 2009-ல் இருந்து அரசு மருத்துவமணைகளில் மருத்துவர்கள் தங்கள் வருகை மற்றும் பணிமுடிந்து திரும்பும் நேரத்தையும் குறிப்பிடவும், தேவைப்பட்டால் கைரேகை மூலம் இதை பதிவு செய்யும் பையோ அட்டெண்டன்ஸ் முறை அமுலக்கப்படும் என்று தமிழக மருத்துவ கவுன்ஸில் தலைவர் டாக்டர்.விநாயகம் தெரிவித்துள்ளார். இது நடைமுறையாகும் என நம்புவோமாக!!
சென்னை நகர மருத்துவர் சங்க தலைவர் 'இப்படி அட்டெண்டன்ஸ் முறைகள் திருத்துஅமைக்கப்பட்டால் மருத்துவர்களுக்கு சம்பள உயர்வும் தேவைனு சொல்லியிருக்காரு. அது சரி சம்பளத்துக்கு பார்க்கவேண்டிய வேலையையே லஞ்சம் கொடுத்து பார்க்கவைக்க வேண்டிய நிலமைலதானே இருக்கோம்!!
500 ரூபாய்!!! இது ஒரு அரசு மருத்துவமணையின் தலைமை மருத்துவர்(டீன்) அந்த மருத்துவமணைக்கு அத்தியாவசிய மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்க நாள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் தொகை. இதை வைத்து பாண்டேஜ் வாங்க முடிந்தாலே பெரிய விஷயம். இது போன்ற முரண்பாடுகள் இருக்க காரணம் மருத்துவ கவுன்ஸிலின் விதிமுறைகள்(ஸ்டாண்டிங் ஆர்டர்)1956ஆம் அண்டு திருதியமக்கப்பட்டதென்றும், இதில் சில 1930களில் ஏற்படுத்தப்பட்டவை என்றும் தெருவிதுள்ள திரு.வினாயகம், இதில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் டீன், மற்றும் துறைத்தலைவர்களுக்கு மருத்துவமணையின் வளர்ச்சிகும், புதிய ஆராய்சிகளுக்கும் தேவையான கூடுதல் அதிகாரம் மற்றும் நிதி அளிக்க வழிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பூங்கொத்தும் மூள் கிரீடமும் டிச 8, 2008

இந்த முறை பூங்கொத்து பெறுபவர் திரு. சுந்தர்.
மாற்றுத்திறன் படைத்தவருக்காக சென்னை திருவான்மியூரில் 'ஃப்ரீடம் ட்ரஸ்ட்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம், பயிற்சியரங்கம் மற்றும் காப்பகம் நடத்திவருகிறார். இவர் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த தனிமனிதர்(பெஸ்ட் இண்டிவிஜுவல்) விருதினை குடியரசு தலைவரிடம் இருந்து உலக மாற்றுத்திறன் படைத்தோர் தினத்தன்று பெற்றார்.
சொந்த அலுவல்கள் காரனமாக பட்டிணப்பிரவேசத்தில் பதிவிடாத வாழவந்தான் இந்த முறை முள்கிரீடம் பெறுகிறார் :-)

இனி ஒரு விதிசெய்வோம்

டிச 1. உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்உலகெங்கும் பேரணி, பிரச்சாரம் என்று விழிபுணர்வு ஏற்படுத்த படாதபாடு பட்டுக்கொண்டிருக்க நம்ம தமிழ் நாட்டுல என்ன நிலைமைனு கவனிக்கனும்..ஏறத்தாழ ஒரு வருடம் முன்பு விக்னேஷ் என்ற மூன்று வயது சிறுவன் அவனது தந்தையாலேயே மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டான்(சாகும்வரை). நல்லவேளை விஷயம் காவல்துறைக்கு தெரிந்து அவர்கள் குழந்தையை மீட்டு அவன் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டான். அந்த குழந்தை இவ்வாறு கொடுமைப்பட காரணம் அவனுக்கு எச்.ஐ.வி பாஸிடிவ். பாவம் அவன் இந்த வருட எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்திற்குள் மரணமடைந்தான். இதில் கொடுமை என்னவென்றால் அவன் மரணத்திற்கு பிறகு அவன் பாட்டி கூட அவனை நெருங்கவில்லை...
சில தினங்களுக்கு முன் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மரணமடைந்த பெண்ணை அடக்கம் செய்ய காசு இல்லை என்று அவள் பெற்றோர் மறுத்துவிட, டாக்டர்கள் பண உதவி செய்தும், அதை பெற்றுக்கொண்ட பெற்றோர் பின் மாயமானார்கள். காரணம் அந்த பெண் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவள்.நோயாளிகளின் நிலை இதுவென்றால் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கும். வருடத்திற்கு 2000 போஸ்ட்மார்டம்(இதில் குறைந்தது 50 எய்ட்ஸ் பாதித்தவர்கள்) நடைபெறும் அரசு மருத்துவமணைகளில் யூ.என்.இன் சுகாதார அமைப்பு பரிந்துரைத்த எய்ட்ஸ் தர்காப்பு முறைகள் என்பது கனவில் செய்துகொள்ள வேண்டிய ஒன்று. பாவம் மருத்துவமணை ஊழியர்கள் ஒவ்வொரு போஸ்ட்மார்டத்திற்கும் அவர்கள் மரண பயத்தில் உள்ளனர்.இவை மாற்றப்படுமா??

உலக மாற்றுத்திறன் படைத்தோர் தினம்


இன்று உலக மாற்றுத்திறன் படைத்தோர் தினம்!!!

மாற்றுத்திறன்(ஊனமுற்றவர்களுக்கு) படைத்தவர்களுக்கு
படிக்கற்களாய் இல்லையென்றாலும்
தடைக்கற்களாய் இல்லாமல் இருப்போம்!!
அவர்கள் திறன் அற்றவர்கள் இல்லை..
மாற்றுத்திறன் பெற்றவர்கள்...
உதாரணம் கீழே...


Disabled in city help blind in US

Cheannai : Maria places a few pages of a book of German poems in a scanner and within minutes the pages pop up on Ilavarasi's computer. She converts
it into a word
document and runs a spell check. After the pages are laid out, the file goes to Ambika, who checks each word against the original German. For the past two months, six disabled girls at the Worth Trust in Chennai have been scanning and uploading books for Bookshare, a US-based project that makes books available to blind people. From Allan Massie's 'Tiberius' and 'The Selected Poems of Rainer Maria Rilke' to pulp fiction and mushy romances, the six girls with orthopaedic disabilities work in the Trust's office in KK Nagar, scanning, proof-reading and uploading books. "The work is not hard but we need to concentrate," says Ilavarasi. The seventh member of the team is Vishal, a visually-impaired MA Literature student, who works from home. The trust sends him finished books, and he uses a voice synthesiser software to listen to the book. They upload about 160 books a month. If there are pictures on the page, they write a brief description that will help the blind person imagine it. Bookshare is an online library for the blind, visually impaired and people with reading disabilities in the US. Apart from 37,000 books, they have about 1,50,000 newspapers
and periodicals online. "It's like amazon.com for the blind," says James R Fruchterman, CEO of Benetech, the non-profit that created bookshare.org. "A blind person can download and read any book using voice synthesiser software." The website provides free voice software, developed by Benetech. Bookshare.org will be available in India soon. The subscription will be Rs 400 for a year, inclusive of the software download
. "At present, East West and Katha are the only Indian publishers who have agreed to make their books available. We're looking to scan and upload books in Tamil and other languages," says James. The uploading of Tamil books will be done through Worth Trust, but Venkataraman, who heads the Chennai office, is planning to have Tamil books typed rather than scanned as it will provide more jobs for the disabled. "If we type, we can provide jobs for students from our in-house typing course. The idea is to make the disabled self-sufficient and self-confident."


மேலே உள்ள செய்தி ஏப்ரல் 25 2008 அன்று சென்னை எடிஷன் 'டைம்ஸ் ஆப் இந்தியா' வில் வெளிவந்தது அதன் சுட்டி : http://timesofindia.indiatimes.com/Chennai/Disabled_in_city_help_blind_in_US/articleshow/2980943.cms