பூத்தது புத்தாண்டு


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

கல்வி - வியாபாரமா? விபரீதமா??

'சாமி' போல் போலீசிலிருந்து பொறுக்கியாகி, புரட்சித்தலைவரின் பாதுகாவலருமாகி, இன்று கல்வித் தந்தை(??) ஆகிவிட்டவரின் பல்கலைகழகத்தில் நடந்த சம்பவம். பராமரிப்பு பணிகளுக்கு பின் சரியாக மூடப்படாத மின்சார கம்பி 'நிஷாவின்' அருளால் வெளிவர, மின்சாரம் தாக்கி கிருஷ்ண்கிரியை சேர்ந்த பிரசாத் குமார் என்ற முதலாம் ஆண்டு எஞ்சினீரிங் மாணவர் பலியானார். இது நிர்வாகத்தின் கவனகுறைவால் ஏற்பட்டதென்று மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், போலீஸில் புகார் கொடுக்கப்பட்டதாகவோ, நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. சென்னை புறநகரில் உள்ள இதே யுனிவர்ஸிடியில் சில வாரங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவரை ஆஸ்பிடலில் சேர்க்க பல்கலை நிர்வாகம் மறுக்க, மாணவர்கள் போராடி அவனை மருத்துவமணைக்கு அனுப்பியுள்ளனர்.
பல கனவுகளுடன் சில லட்சங்களை(7 லட்சம்)கொடுத்து எஞ்சினீரிங் சேர்த்து, மகனையே பறிகொடுத்து நிற்கும் பெற்றோருக்கு பல்கலை நிர்வாகத்தின் பதில் என்ன?? இதுபோன்ற நிர்வாகத்தால் இன்று கல்வி வியாபாரமல்ல அதையும் தாண்டி விபரீதமாகி வருகிறது!!!

வசூல்ராஜாக்களும் 500 ரூபாயும்

தமிழகத்தில் மட்டும் சரியான நேரத்திற்கு வேலைக்கு வராமலிருக்கும் வசூல்ராஜாக்கள் 30%. இதை தடுக்க வரும் 2009-ல் இருந்து அரசு மருத்துவமணைகளில் மருத்துவர்கள் தங்கள் வருகை மற்றும் பணிமுடிந்து திரும்பும் நேரத்தையும் குறிப்பிடவும், தேவைப்பட்டால் கைரேகை மூலம் இதை பதிவு செய்யும் பையோ அட்டெண்டன்ஸ் முறை அமுலக்கப்படும் என்று தமிழக மருத்துவ கவுன்ஸில் தலைவர் டாக்டர்.விநாயகம் தெரிவித்துள்ளார். இது நடைமுறையாகும் என நம்புவோமாக!!
சென்னை நகர மருத்துவர் சங்க தலைவர் 'இப்படி அட்டெண்டன்ஸ் முறைகள் திருத்துஅமைக்கப்பட்டால் மருத்துவர்களுக்கு சம்பள உயர்வும் தேவைனு சொல்லியிருக்காரு. அது சரி சம்பளத்துக்கு பார்க்கவேண்டிய வேலையையே லஞ்சம் கொடுத்து பார்க்கவைக்க வேண்டிய நிலமைலதானே இருக்கோம்!!
500 ரூபாய்!!! இது ஒரு அரசு மருத்துவமணையின் தலைமை மருத்துவர்(டீன்) அந்த மருத்துவமணைக்கு அத்தியாவசிய மருந்து மற்றும் உபகரணங்கள் வாங்க நாள் ஒன்றுக்கு கொடுக்கப்படும் தொகை. இதை வைத்து பாண்டேஜ் வாங்க முடிந்தாலே பெரிய விஷயம். இது போன்ற முரண்பாடுகள் இருக்க காரணம் மருத்துவ கவுன்ஸிலின் விதிமுறைகள்(ஸ்டாண்டிங் ஆர்டர்)1956ஆம் அண்டு திருதியமக்கப்பட்டதென்றும், இதில் சில 1930களில் ஏற்படுத்தப்பட்டவை என்றும் தெருவிதுள்ள திரு.வினாயகம், இதில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் டீன், மற்றும் துறைத்தலைவர்களுக்கு மருத்துவமணையின் வளர்ச்சிகும், புதிய ஆராய்சிகளுக்கும் தேவையான கூடுதல் அதிகாரம் மற்றும் நிதி அளிக்க வழிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பூங்கொத்தும் மூள் கிரீடமும் டிச 8, 2008

இந்த முறை பூங்கொத்து பெறுபவர் திரு. சுந்தர்.
மாற்றுத்திறன் படைத்தவருக்காக சென்னை திருவான்மியூரில் 'ஃப்ரீடம் ட்ரஸ்ட்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம், பயிற்சியரங்கம் மற்றும் காப்பகம் நடத்திவருகிறார். இவர் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த தனிமனிதர்(பெஸ்ட் இண்டிவிஜுவல்) விருதினை குடியரசு தலைவரிடம் இருந்து உலக மாற்றுத்திறன் படைத்தோர் தினத்தன்று பெற்றார்.
சொந்த அலுவல்கள் காரனமாக பட்டிணப்பிரவேசத்தில் பதிவிடாத வாழவந்தான் இந்த முறை முள்கிரீடம் பெறுகிறார் :-)

இனி ஒரு விதிசெய்வோம்

டிச 1. உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்உலகெங்கும் பேரணி, பிரச்சாரம் என்று விழிபுணர்வு ஏற்படுத்த படாதபாடு பட்டுக்கொண்டிருக்க நம்ம தமிழ் நாட்டுல என்ன நிலைமைனு கவனிக்கனும்..ஏறத்தாழ ஒரு வருடம் முன்பு விக்னேஷ் என்ற மூன்று வயது சிறுவன் அவனது தந்தையாலேயே மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டான்(சாகும்வரை). நல்லவேளை விஷயம் காவல்துறைக்கு தெரிந்து அவர்கள் குழந்தையை மீட்டு அவன் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டான். அந்த குழந்தை இவ்வாறு கொடுமைப்பட காரணம் அவனுக்கு எச்.ஐ.வி பாஸிடிவ். பாவம் அவன் இந்த வருட எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்திற்குள் மரணமடைந்தான். இதில் கொடுமை என்னவென்றால் அவன் மரணத்திற்கு பிறகு அவன் பாட்டி கூட அவனை நெருங்கவில்லை...
சில தினங்களுக்கு முன் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மரணமடைந்த பெண்ணை அடக்கம் செய்ய காசு இல்லை என்று அவள் பெற்றோர் மறுத்துவிட, டாக்டர்கள் பண உதவி செய்தும், அதை பெற்றுக்கொண்ட பெற்றோர் பின் மாயமானார்கள். காரணம் அந்த பெண் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவள்.நோயாளிகளின் நிலை இதுவென்றால் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கும். வருடத்திற்கு 2000 போஸ்ட்மார்டம்(இதில் குறைந்தது 50 எய்ட்ஸ் பாதித்தவர்கள்) நடைபெறும் அரசு மருத்துவமணைகளில் யூ.என்.இன் சுகாதார அமைப்பு பரிந்துரைத்த எய்ட்ஸ் தர்காப்பு முறைகள் என்பது கனவில் செய்துகொள்ள வேண்டிய ஒன்று. பாவம் மருத்துவமணை ஊழியர்கள் ஒவ்வொரு போஸ்ட்மார்டத்திற்கும் அவர்கள் மரண பயத்தில் உள்ளனர்.இவை மாற்றப்படுமா??

உலக மாற்றுத்திறன் படைத்தோர் தினம்


இன்று உலக மாற்றுத்திறன் படைத்தோர் தினம்!!!

மாற்றுத்திறன்(ஊனமுற்றவர்களுக்கு) படைத்தவர்களுக்கு
படிக்கற்களாய் இல்லையென்றாலும்
தடைக்கற்களாய் இல்லாமல் இருப்போம்!!
அவர்கள் திறன் அற்றவர்கள் இல்லை..
மாற்றுத்திறன் பெற்றவர்கள்...
உதாரணம் கீழே...


Disabled in city help blind in US

Cheannai : Maria places a few pages of a book of German poems in a scanner and within minutes the pages pop up on Ilavarasi's computer. She converts
it into a word
document and runs a spell check. After the pages are laid out, the file goes to Ambika, who checks each word against the original German. For the past two months, six disabled girls at the Worth Trust in Chennai have been scanning and uploading books for Bookshare, a US-based project that makes books available to blind people. From Allan Massie's 'Tiberius' and 'The Selected Poems of Rainer Maria Rilke' to pulp fiction and mushy romances, the six girls with orthopaedic disabilities work in the Trust's office in KK Nagar, scanning, proof-reading and uploading books. "The work is not hard but we need to concentrate," says Ilavarasi. The seventh member of the team is Vishal, a visually-impaired MA Literature student, who works from home. The trust sends him finished books, and he uses a voice synthesiser software to listen to the book. They upload about 160 books a month. If there are pictures on the page, they write a brief description that will help the blind person imagine it. Bookshare is an online library for the blind, visually impaired and people with reading disabilities in the US. Apart from 37,000 books, they have about 1,50,000 newspapers
and periodicals online. "It's like amazon.com for the blind," says James R Fruchterman, CEO of Benetech, the non-profit that created bookshare.org. "A blind person can download and read any book using voice synthesiser software." The website provides free voice software, developed by Benetech. Bookshare.org will be available in India soon. The subscription will be Rs 400 for a year, inclusive of the software download
. "At present, East West and Katha are the only Indian publishers who have agreed to make their books available. We're looking to scan and upload books in Tamil and other languages," says James. The uploading of Tamil books will be done through Worth Trust, but Venkataraman, who heads the Chennai office, is planning to have Tamil books typed rather than scanned as it will provide more jobs for the disabled. "If we type, we can provide jobs for students from our in-house typing course. The idea is to make the disabled self-sufficient and self-confident."


மேலே உள்ள செய்தி ஏப்ரல் 25 2008 அன்று சென்னை எடிஷன் 'டைம்ஸ் ஆப் இந்தியா' வில் வெளிவந்தது அதன் சுட்டி : http://timesofindia.indiatimes.com/Chennai/Disabled_in_city_help_blind_in_US/articleshow/2980943.cms

மலர்வளையம்


இந்தியாவின் முதல் கூட்டணி மத்திய அரசை அமைத்து அதன் மூலம் இந்தியாவின் பத்தாவது பிரதமராக பணியாற்றிய,
மிஸ்டர்.கிளீன் எனப் புகழப்பட்ட திரு. விஸ்வனாத் பிரதாப் சிங் என்னும் வி.பி.சிங் இன்று இயற்கை எய்தினார்..
அவரது ஆன்மா சாந்தியடைய பட்டணப்பிரவேசம் பிரார்திக்கிறது

கண்ணீர் அஞ்சலி

மும்பாய் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த போலீஸ் அதிகாரிகள்,(கீழே படத்தில்...)

1. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சாலஸ்கர் (சுமார் 80 என்கவுண்டர்கள் மூலம் மும்பையின் நிழலுலகை உலுக்கியவர்)
2.ஹேமந்த் கர்கரே (ஏ.டி.எஸ் தலைவர் - மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல தீவிரவாத செயல்களை புலனாய்ந்தவர்)
3. ஏஸிபி அஷோக் காம்தே(இவர் தாத்தா மும்பாயின் முதல் ஐ.ஜி)
இவர்களுக்கும் மேலும் இந்த போராட்டத்தில் உயிர் இழந்த அனைத்து மனிதருக்கும்(தீவிரவாத நாய்கள் இதல் அடங்கா!!) பட்டணப்பிரவேசத்தின் கண்ணீர் அஞ்சலி

டாக்டர் எத்தனை டாக்டரடி

ஹிதேந்திரன் - இந்த பெயரை தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் அதற்குள் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புவோமாக. சில வாரங்களுக்கு முன்பு சாலை விபத்தால் மூளை சாவை சாந்தித்த 16வயது ஹிதேந்திரனின் உடல் உறுப்புக்களை அவனது பெற்றோர்(அசோகன், புஷ்பாஞ்சலி - இருவரும் மருத்துவர்கள்) தானம் செய்தனர். இதை தொடருந்து ஏற்பட்ட விழிப்புணர்வால் உடல் உறுப்புக்களை தானம் செய்வது பெருகிவருகிறது. இதற்கு அரசும் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல முயற்சிகளை செய்துவருகிறது.
இதை நான் இங்கு குறிப்பிட காரணங்கள் சில.. கரூர் மாவட்டத்தை சேர்ந்த மருதை என்னும் தச்சு தொழிலாளியின் மனைவி சாந்தி என்பவர் மூளைச்சாவை சந்தித்தார், இதை தொடருந்து அவரது 14 வயது மகன் சுரேஷின் தூண்டுதலில் சாந்தியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன(அல்லது வழங்கப்படவுள்ளன). இதன் தொடர்ச்சியாக என் நினைவுக்கு வரும் இரு வேறு சம்பவங்கள்... சில நாட்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ராஜாராம்-கவிதா தம்பதியர் தமது 5வயது மகன் நவீனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதில் எனக்கு மாற்று கருத்துகள் உண்டு. நவீனுக்கு முளை செயல்திறன் குறைவே அன்றி மூளைச்சாவு ஏற்படவில்லை. பொருளாதார பிரச்சனைகளுக்கு உறுப்பு தானம் தீர்வாகதே!!. இதை தவிர்த்து நவீனை அரசு அல்லது தனியார் காப்பகங்கள் வளர்க்கலாமே!!!
/// கின்னஸ்(??) திலீபன் பெற்றோருடன்///


/// நவீன் தாய் கவிதாவுடன்////


சம்பவம் இரண்டு...
சென்ற ஆண்டு ஜூன் மாதம் மணப்பாறையை சேர்ந்த டாக்டர் தம்பதி முருகேசன் காந்திமதியின் தவப்புதல்வன் திலீப் என்னும் 15வயது சிறுவன் கின்னஸ் சாதனைக்காக சிஸேரியன் ஆப்பரேஷன் செய்து சர்ச்சைக்குள்ளானது நினைவிறுக்கிறதா??. இது கின்னஸில் இடம்பிடித்ததோ இல்லையோ, சிறுவன் சீர்திருத்தப்பள்ளி சென்றதே மிச்சம். இதில் மேலும் அதிர்ச்சி தரும் செய்தி அந்த டாக்டர் தம்பதியர் தங்களின் ஓராண்டு தடை நீங்கி மருத்துவ சேவையை(???) சமீபத்தில் தொடர ஆரம்பித்தனர். இதனால் எத்தனை உயிர்கள் ஊசலாட உள்ளதோ??

கவனிக்க: ஹிதேந்திரன், திலீபன் இருவரின் பெற்றோரும் மருத்துவர்களே!!!

கொசுறு:
இதை பதிந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டை சேர்ந்த மற்றோரு மருத்துவர் 24 மணி நேரத்தில் 50 ஹிரண்யா ஆப்பரேஷன் செய்ய முயன்றதாக அறிந்து அதிர்ந்தேன்..
ஐயா உங்கள் சாதனை சோதனைகளுக்கான விலை மற்றவர் உயிர் அல்ல!!

நிழல் நாயகன்

திரையில் வில்லனாகவும் நிஜவாழ்வில் நாயகனாகவும் வாழ்ந்த திரு. எம். என். நம்பியார் அவர்கள் இன்று இயற்கை எய்தினார்...
அவரது ஆன்மா சாந்தியடைய பட்டிணப்பிரவேசம் பிரார்த்திக்கிறது!!

என் தோழி... என் காதலி... என் மனைவி...

தமிழோவியம் இணைய இதழில் வெளிவந்ததாக வினையூக்கி வலைப்பதிவில் நான் படித்த இடுகை..
(பட்டணப்பிரவேசத்தின் முதல் காப்பி பேஸ்ட் :-))

அலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் மனைவியாக இருந்தாலும் கைநீட்டக்கூடாது என கொள்கை வைத்திருப்பதால் அதைச்செய்யவில்லை.. நான் கல்லூரிக்காலங்கள் எட்டும் வரை என் அம்மாவை கைநீட்டி அடிக்கும் பழக்கத்தை விடாத என் அப்பாவினால், நான் எடுத்த முடிவு எனக்கென வரும் பெண்ணிடம் எந்த விதத்திலும் உடல் ரீதியான வன்முறைகளைப் பிரயோகிக்கக் கூடது என்பது தான். இந்த விசயத்தில், ஜெனியை கல்லூரி கணிப்பொறி ஆய்வகத்தில் நான்கு பேர் மத்தியில் வைத்து அறைந்ததில் சறுக்கி இருக்கிறேன். அந்த அறைக்காக நான் கொடுத்த விலை அதிகம், நல்ல வாழ்க்கைத் துணையாக வந்து இருக்கக்கூடியவளை, தோழி என்ற நிலையிலும் இழந்ததுதான் இன்று வரையில் நான் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் விசயம்.கீர்த்தனாவை நான் காதலித்த காலங்களிலும் சரி, திருமணம் ஆகி இந்த நான்கு வருடங்களிலும் சரி ஒரு முறையேனும் கடிந்து கூடப் பேசியது இல்லை. நான் இப்படி மனதில் பொரிந்து கொண்டிருக்கக் காரணம், காலையில் கீர்த்தனா அஞ்சலிபாப்பாவை கண்மண் தெரியாமல் அடித்ததுதான். . மூன்று வயதுக்குழந்தை குடிக்க கொடுத்த காம்ப்ளானை எங்க வீட்டின் வெளியே இருக்கும் தென்னைமரத்தின் கீழே பாதியைக் கொட்டிவிட்டு என்னிடம் வந்து "அப்பா, கோக்கநெட் டிரீ இன்னும் ஹைட்டா வளரும்பா" சொன்னது தான் தாமதம், வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு நகத்தைக் கடித்துகொண்டிருந்தவள் அஞ்சலிப்பாப்பவை இழுத்து "ஏண்டி , கஷ்டப்பட்டு உனக்கு காம்ப்ளான் வச்சுக்கொடுத்தா,கீழேயா கொட்டுற, திமிருடி உனக்கு" என சொல்லிவிட்டு பிஞ்சுக் குழந்தையின் கன்னத்திலும் முதுகிலும் தொடர்ந்து அடித்த பொழுது "அம்மு, ஏம்மா குழந்தையை அடிக்கிறே" நான் விலக்கிய பின்னரும் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தாள்.சில நிமிடங்களுக்கு முன்னர் வரை மழலையாய் இருந்த அஞ்சலிப்பாப்பாவின் முகம் வாடி, மிரண்டு போய் இருந்தது. கீர்த்தனாவின் கோபத்திற்கு உண்மையான காரணம் காம்ப்ளானைக் கீழேகொட்டியது அல்ல, இன்று இரவு ரம்யாவின் வீட்டிற்கு விருந்திற்கு குடும்பத்துடன் போகவேண்டும் எனக்கேட்டததற்காகத்தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது எனக்குப்புரிந்தது.ரம்யா என்னால் ஒருதலையாகக் காதலிக்கப்பட்டவள். ரம்யா என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என உறுதியாகத் தெரிந்த காலங்களில் தான் கீர்த்தனாவின் அறிமுகம், நேசம், எல்லாம் கிடைத்தது. கீர்த்தனாவிடம் எதையும் மறைத்ததில்லை. ஜெனி முதல் ரம்யா வரை எனது அனைத்து விருப்பங்களும் அவளுக்குத்தெரியும். ஜெனி பற்றி பேசினால் கூட பொறுமையாய் கேட்பவள், ஆனால் ரம்யா பற்றி பேசினால் எப்படியாவது பேச்சை மாற்றிவிடுவாள். என்னதான் பிடிக்காமல் இருந்தாலும் ரம்யாவைப்போய் பார்க்க தான் வரவில்லை அல்லது நானும் போகக்கூடாது என நேரிடையாகச் சொல்லி இருக்கலாம்,ஆனால் அதைவிட்டு பிஞ்சு குழந்தையிடம் அவளது கோபத்தைக் காட்டியது எனக்கு வெறுப்பாக இருந்தது.அலுவலகம் வரும் முன் கீர்த்தனாவிடம் "இன்னக்கி சாயந்திரம் ரம்யா வீட்டுக்கு போகவேனாமுன்னா சொல்லிடு நானும் போகல, உன்னையும் கூட்டிட்டுப்போகல, அவள் மேல இருக்கிற கோபத்தை என் குழந்தை மேல காட்டாதே!!" நிதானமாக சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி வந்தெ வேலையில் மனது ஓடாமல் குட்டிப்பாப்பாவுடன் பேச, வீட்டிற்கு அலுவலகத் தொலைபேசியில் இருந்து அழைத்தேன்."பாப்பா என்ன பண்ணிட்டு இருக்கா?" எனக்கு கீர்த்தனாவின் மேல் கோபம் இருந்தால் அம்மு என விளிப்பதை தவிர்த்துவிடுவேன். அது அவளுக்கும் புரியும். கோபத்தைக் காட்டுவதில் இதுவும் ஒரு வகை."தூங்கிட்டு இருக்கா""லஞ்ச் சாப்பிட்டாளா? திரும்ப அடிச்சியா?""சாப்பாடு ஊட்டி விட்டுட்டுதான் தூங்க வச்சேன், அடிக்கல கார்த்தி" சிறிய மௌனத்திற்குப்பின் "சாரி கார்த்தி" என சொன்னபோது குரல் உடைந்திருந்தது. அழுதிருப்பாள் போலும். இருந்தாலும் கீர்த்தனாவின் மேல் இருந்த கோபம் குறையவில்லை.அவள் "சாரி." சொல்லி முடிக்கும் முன்னரே தொலைபேசியை வைத்தேன்."கார்த்தி, காப்பி போலாமா?" எனது மேலாளர் மோகனின் குரல் கேட்டது.காப்பிக்குடிக்க எங்களது அலுவலகத்தின் மேற்தளத்திற்கு சென்றபொழுது, அவரிடம் காலையில் நடந்த பிரச்சினையை சொன்னேன்."பளார்னு ஒரு அறை விட்டிருக்கனும் சார், பிசிக்கலா வயலன்ஸ் கூடாதுன்னு விட்டுட்டேன்"மோகன் சிரித்தபடி "கார்த்தி, வயலன்ஸ் எந்த ஃபார்ம்ல இருந்தாலும் தப்புதான், வார்த்தைகளில் இ்ருக்கும் வயலன்ஸ் பிசிக்கல் வயலன்ஸை விட குரூரமானது, நீ ரம்யா வீட்டிற்குப்போறதைப் பத்தி கீர்த்தனா கிட்ட டிஸ்கஸ் பண்ணியா, இல்லை போலாம்னு இன்பார்ம் பண்ணியா?"மோகன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை."நாம நிறைய சமயங்களில், கோபப்படுவதில்லை, சாத்வீகமா இருக்கோம்னு நினைச்சுக்கிட்டு, நம்மளை அறியாமல் கூட இருக்கிறவங்களைக் டிப்லோமெடிக்கா பேசுறோம்னு வார்த்தைகளில் காயப்படுத்திடுறோம், இதுக்கு முன்னாடி கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதே இல்லையா?""வாலுத்தனம் நிறைய செஞ்சா அடிப்பாள்""உன்னோட கோபத்திற்கு காரணம், கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதை விட, ரம்யா வீட்டுக்கு முழுமனசோடு வர விருப்பம் இல்லைன்னு நீ நினைச்சதுதான்""ம்ம்ம்ம்""வாழ்க்கைல எல்லா விசயமும் ப்ரியாரிட்டி தான் கார்த்தி, உனக்கு ரம்யாவோட நட்பு முக்கியமா இருக்கலாம், ஆனால் அதைவிட கீர்த்தனாவை நீ புரிஞ்சுக்கிறது முக்கியம்..... அதிக முக்கியத்துவம் இல்லாத விசயங்களுக்காகத்தான் நாம அற்புதமான உறவுகளை கஷ்டப்படுத்திடுறோம்."பேசிக்கொண்டே எங்கள் இடத்திற்கு வந்தபின் மோகனிடம் "எனக்கு டு ஹவர்ஸ் பர்மிஷன் வேணும்""ம்ம்ம்ம் எடுத்துக்கோ"மோகனிடன் விடைபெற்றுக்கொண்டு, வீட்டிற்கு வந்த பொழுது கீர்த்தனாவும் அஞ்சலிப்பாப்பாவும் அழகான உடைகளில் தயாராகி இருந்தனர். காலையில் ஒன்றுமே நடக்காதது போல அம்மாவும் பிள்ளையும் விளையாடிக்கொண்டிருந்தனர்."என்னோட ரெண்டு தேவதைகளும் ரெடியா ஆயிட்டிங்களா." சொல்லியபடி குழந்தையைத் தூக்கி கொஞ்சிகொண்டே "அப்பா, போய் ரெண்டு நிமிசத்துல ரெடியாயிட்டு வருவேனாம்..அப்புறம் கிளம்புவோமாம்"நானும் வேறு உடைமாற்றிக்கொண்டு நான் காரின் முன்பகுதியில் அமர்ந்து, காரின் பின் இருக்கையைப் பார்க்கும் கண்ணாடியில் என் தேவதைகள் தெரியும்படி சரி செய்தேன். கண்ணாடியில் கீர்த்தனா "சாரி" சொன்னாள். கீர்த்தனாவின் கோபம் பனிபோல... சடுதியில் மறைந்துவிடும்."கார்த்தி, ரம்யா வீடு வடபழனி தானே,,, நீ ரைட் எடுக்காம லெஃப்ட் எடுக்கிற""அம்மு, நாம இப்போ பீச் போறோமாம், பின்ன ஸ்ரீகிருஷ்ணால டின்னர் சாப்பிடுறோமாம்..இது மட்டும்தான் இன்னக்கி அஜெண்டா"கண்ணாடியில் சிரித்தபடியே சொன்ன "தாங்க்ஸ் அண்ட் மீ டூ " என சொல்லிக் கண்ணடித்தாள், மனதில் ரம்யாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, வாழ்க்கையின் சில முன்னுரிமைகளைப் புரிந்து கொண்டபடியே கடற்கரையில் வண்டியை நிறுத்தினேன்.

இது ஒரு நிலாக்காலம்

நிலாவில் தடம் பதித்த நம் இஸ்ரோ வல்லுனர்களுக்கு இந்த முறை மலர்க்கொத்து வழங்கப்படுகிறது.
பணத்தை செலவழிக்க வழிதெரியாமலும், கோட்டாக்களின் முறைகேடுகளாலும் சட்டக்கலூரிக்குள் மாணவர் என்ற பெயரில் நுழைந்து வெறித் தாண்டவம் ஆடிய நாட்டின் விஷக்கிருமிகளுக்கு இந்த முறை முள் கிரீடம்.

குழந்தைகள் தின வாழ்த்து!!

வலைப்பதிவு உலகின் கைக்குழந்தை (பதிய ஆரம்பித்து ஒரு மாதமே ஆகியிருப்பதால்) ஆகிய வாழவந்தான் உலகில் உள்ள அனைத்து குழந்தை உள்ளங்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!!!

இருட்டு அறையில் முரட்டு குத்து

சென்னை சட்டக்கல்லூரி, மன்னிக்க "சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி". இதில் என்ன மன்னிப்பு கேட்க்கும் அளவுக்குனு யோசிக்கவேண்டாம். ஏன்னா, இதே போல ஒரு (விளம்பர)போஸ்டரில் திரு.அம்பேத்கர் அவரது பெயர் விடுபட்டது மாணவர்களிடையே ஜாதி(என்ற பெயரில்) கலவரம் உருவாக காரணமானது.தமிழ் கூறும் நல்லுலகதில் ஏரத்தாழ எல்லாரும் சன் டிவி பார்ப்பதால் இந்த கலவரத்தோட காரணத்தை பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். சென்னை சட்டக்கல்லூரில கலாட்டாக்க்ள் நடைபெறுவது செமஸ்டர் தேர்வுகள் மாதிரி வருடத்தில் ஓரிரு முரை வந்து போகும் என்றாலும், இந்த முறை 'இதயம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்' என்ற குறிப்போடு ஏதோ தீவிரவதிகளின் படுகொலை கேஸட்டுகளுக்கு இனையான ஒரு வெறித்தாண்டவமாக இருந்தது இந்த கலவரம்.



உயிருக்கு பயந்து மரத்தில் தொங்குபவன், அடிவாங்கி மயக்கமானவன் இப்படி யாரையும் விடாம கொலைவெறியோடு தக்குதல். எங்கு பார்த்தாலும் கத்தி, உருட்டுகட்டை, டியூப்லைட் என்று சைஸ் வாரியாக ஆயுதங்களுடன் அலையும் வெறிபிடித்த இரண்டு கால் ஜந்துக்கள்(அவனுங்களை நாய், நரி-நு சொன்னா அது அந்த மிருகங்களை கேவலபடுத்துவதாகும்). இவனுங்க எல்லாம் எதிர்காலத்துல கோர்ட்டுக்கு போய் என்னதை சாதிக்கப்போரானுங்கனு தெரியல. இப்ப எல்லாம் கோர்ட் வளாகத்துல கொலை நடக்குது இந்த மாதிரி ஆளுங்க வக்கீலானா கோர்ட் உள்ள கொலை நடக்கும். அதை நீதிபதியும் நீதி தேவதையும் ஏதோ ரியாலிட்டி ஷோ மாதிரி பார்க்கவேண்டியதுதான். போலீஸ் பத்தி கேக்கவேண்டாம், அவங்க இப்பவே வேடிக்கை தான் பார்த்தாங்க. பாவம், போலீசையும் குறை சொல்ல முடியாது, அரசியல் தலையீடு, விசாரணை கமிஷன், மனித உரிமை இதெல்லாம் தாண்டி தான் கடமையை செய்யனும். அப்படியே வேலை செய்ஞ்சாலும் மேல சொன்ன விஷயத்துல ஏதாவது ஒண்ணு அவங்க வேலையை பறித்திடும், அதுக்கு சும்மா இருந்துட்டு சஸ்பென்ஷன் வாங்கிட்டு, சம்பளத்தோட கொஞ்ச நாள் லீவும் எடுத்துட்டு வேலைக்கு வந்துடலாம்.
மொத்தத்தில் அரசியல் ஆதயங்களுக்காக லோக்கல் ரௌடிகளின் பயிற்சிகூடமாக இயங்கிவரும் சட்டக்கலூரியின் ஒரு செய்முறை பயிற்சியே இந்த கலவரம். இதை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் படித்து பட்டம் பெற்று வெளியேறுகிரார்களோ இல்லையோ, அளுக்கொரு கொலை அல்லது அதற்கு இணையான கிரிமினல் கேசுடன் வெளியேறுவார்கள்(வாதிடும் வழக்கறிஞராக அல்ல குற்றம் செய்தவர்களாக)

பின் குறிப்பு: சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள், அந்த சட்டதை படிக்கிறேன் என்ற பெயரில் சில மிருகங்கள் செய்த வெறிச்செயலை பற்றி பகிர்ந்துகொண்டதால் இந்த(இருட்டு அறையில் முரட்டு குத்து) தலைப்பு. இதை வேறு ஏதேனும் காரணத்திற்காக தேடிவந்த்திருந்தால் அதற்கு வாழவந்தவனோ அல்லது பட்டணப்பிரவேசமோ பொருப்பல்ல!!!

சங்க இலக்கியத்தால் சீரழியும் தமிழினம்

சமீபத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் வாரிசான கனிமொழி அவர்கள் 'தேவாரம் திருவாசகம் என கூறி தமிழர்கள் சீரழிந்து கொண்டிருக்கிரார்கள்' என்னும் கருத்தை கூறியுள்ளார். இது கலைஞரின் வழியில் நாத்திகம் என்ற பேரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவதே ஆகும்.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்:தேவாரம் திருவாசகம் போன்ற நூல்கள் கடைச்சங்கத்தின் பக்தி இலக்கியத்தை சேர்ந்தவை.கனிமொழி அவர்கள் இப்ப சமீபத்தில் சென்னை சங்கமம் என்ற ஒரு கிராமிய கலைவிழா நடதினாங்க. இதற்கு காரணம் கிராமிய கலை வளரனும், தமிழ் மக்கள் எல்லாருக்கும் கலை ஆர்வத்தையும் அறிவையும் ஏற்படுத்தனும்னாங்க.இதே மாதிரி சங்க காலத்துலயே, தமிழ் நாட்டுல சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தான் கடவுள் வழிபாடு இருந்துது. அந்த மாதிரி காலகட்டத்துல இறைவன் எல்லார்க்கும் பொது, இறைவனை அடைய மொழி ஒரு தடையா இருக்க கூடாதென்றும், பக்தியின் மூலம் தமிழுக்கு வளம் சேர்த்த நூல்கள் அவை. தேவாரம், திருவாசகம் இதையெல்லாம் வாழ்க்கைல ஒருமுரையாவது ஒழுங்கா படிச்சு இல்ல பொருள் விளங்க எங்கயாவது கேட்டு தெரிஞ்சுகிடிருந்த இந்த மதிரி ஒரு எம்.பி பேசமாடாங்க.கனிமொழி சொல்றதை பார்த்தா சங்க இலகியங்கள் தான் தமிழன் வாழ்கையை வீணாகியதா??

என்(ன) அவசரம்

நான் வணக்கத்துடன் சொன்னது போல காவிரி பாயும்/பாய்ந்த(இப்பயுமா பாயுது??) கோவில் நகரத்து மகாமக குளக்கரையில ஒரு தனியார் ஆஸ்பத்திரில தான் இவன் ஜனனம். என்னோட அப்பா அம்மாவின் அன்னலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் விஷயங்கள் எல்லாம் ஓரளவுக்கு தெரிஞ்சதால் அதுல என் கற்பனை குதிரைய கண்டபடி ஓட விடவேண்டாம்.. தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கப்போன இடத்துல மாப்பிளையின் அக்கா மகளை என் அப்பாவுக்கு புடிச்சுபோக நல்லபடியா பெண் கொடுத்து பெண் எடுத்து முடிந்தது. இப்படியாக காவேரியுடன் சங்கீதமும் பாய்ஞ்சுகிட்டிருந்த ஊர்ல, சங்கீதம் படிச்சுட்டு தன் பாட்டுக்கு தனியா பாடிட்டிருந்த பொண்ணு(என் அம்மாதான்!!) கிளார்க்(எங்க அய்யன்) பாட்டுக்கு எசபாட்டு பாட ஆரம்பிச்சாங்க.
ஆனா பாருங்க, அந்த தம்பதிகளுக்கு குழந்தை செல்வம் இல்ல. அஸ்வமேத யாகமெல்லாம் பண்ணலையின்னாலும் எக்கசக்கமா கோவில் குளத்தை சுத்தி, அப்பறம் தலைசுத்தி அந்த பாட்டு டீச்சர் மூனாவது முறையா கருத்தரிச்சாங்க. ஏற்கனவே ரெண்டு முறை குழந்தைகள் தவறியதால ரொம்பவே கலக்கத்துல இருந்தாங்க அந்த தம்பதி. இதுக்கெல்லாம் நடுவுல வேலைக்கு வேற போய்வந்து அந்த அம்மா கொஞ்சம் சிரமப்பட்டுகிட்டிருந்ததை பொருத்துக்க முடியாத கடவுள், அந்த குட்டி பாப்பாக்கு சுமார் ஒரு 50நாள் முன்னாடியே(8 1/4 மாசத்துல) உலகத்தை பார்க்க பெர்மிட் குடுத்துட்டாரு. இப்படியாக ரெண்டுச்சாமியா(நன்றி: சாமி திரைப்படம்), அம்மாவ கஷ்டப்படுத்த கூடாதுனு அவசர அவசரமா பொறந்தேன். இவ்ளோ அவசர அவசரமா பொறந்ததாலோ என்னவோ அதன் பிறகு இந்த நிமிஷம் வரைக்கும் எல்லாமே கொஞ்ச்ம் ....ஸ்ஸ்ஸுலோ. அடுத்ததா அந்த அவசரகுடுக்கையை உயிர் பொழைக்க வைக்க என்னென்ன பாடுபட்டாங்கனு பார்ப்போம்......

என் கதை

இந்த தலைப்பில் வரும் பதிவுகள் நான் வாழ்க்கையில் மறக்க மறந்தவை. என் டைரியின் பக்கங்களுடன், அதில் சொல்ல மறந்தவைகளும்.

இது தேவையா???

6 சாமி!!!!
இது ஒன்னும் சாமி படத்துல வர விக்ரம் பேரு இல்ல.
போன மாசத்துல மட்டும் சேலம் அரசு ஆஸ்பத்திரில அனாதையா விடப்பட்ட கைக்குழந்தை (infant)களின் எண்ணிக்கை!!
இது ஒரு ஆஸ்பத்திரில ஒரு மாசத்துல தெய்வக்குழந்தை ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைனா, சராசரியா தமிழ்நாட்டுல மட்டும் ஒரு மாசத்துல இந்த மாதிரி விடப்பட்ட குழந்தைகள் எவளவோ??.
இந்த செய்தி டிவில வந்தபோது அது பத்தி பேசின ஒரு சமூக ஆர்வலர் சொன்னதை கவனிக்க வேண்டும். இந்த மாதிரி குழந்தைகள் தவறான தொடர்புகளாலும்(பெரும்பாலானவை), குடும்பத்துல இருக்கும் வருமையாலும் கைவிடப்படுகிறார்கள். எனக்கு ஒரு சந்தேகம், ஒரு குழந்தையை வளர்க்க முடியாது என்னும் போது ஏன் பெற்றெடுத்து அனாதையாக்கனும். அதுவும் இப்ப எவ்வளவோ கருத்தடை சாதனங்கள் கிடைக்குது, இருந்தும் ஏன் இந்த நிலைமை. இதுக்கு காரணம் மக்களின் அறியாமையும், பொருமையின்மையும் தான். பொருமையின்மை பத்தி இங்க இன்னும் விரிவா எடுத்து சொன்னா, பதிவின் பின்புல கலர்ல இருகும்கிறதால அதை தவிர்க்கிறேன். ஆனா மக்களின் அறியாமைக்கு முறையான செக்ஸ் கல்வி இல்லாதது தான்.
முறை அற்ற உரவுகளுக்கு அடித்தளம் பள்ளிக் காலத்துலையே ஆரம்பமாகுது. இது கலாச்சார சீர்கேடா? இல்ல இந்த கேள்வி தனி மனித சுதந்திரத்த பாதிக்கு
தா?. இந்த விவகாரத்தை ரொம்ப விவாதிக்க வேண்டாம். ஆனா இந்த மாதிரி(அனாதையாக்கப்படுதல்) பிரச்சனைகளின் ஆரம்பம் பள்ளிகளா இருக்கும்போது அதை தவிர்க்க முறையான செக்ஸ் கல்வியும் அங்கிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இதுல தனி மனித சுதந்திரத்தை பத்தி நான் குறிப்பிட காரணம், செக்ஸ் என்பது இருவர் சம்பந்தபட்ட விஷயமா இருக்கும்போது அதன் விளைவுகள் முனாவதா அதுவும் ஒரு குழந்தையையும் இந்த சமூகத்தையும் பாதிக்ககூடாது.

வாழவந்தான் வழிகாட்டுகிறான்


எங்க ஏரியா

எப்படி இருந்த நான்...






இப்படி ஆயிட்டேன்!!!













31-10-2008 அன்று பூங்கொத்தும் மூள் கிரீடமும்

இந்த வருடமும் உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு இந்த பூங்கொத்து வழங்கப்படுகிறது.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!!

250கோடி செலவில், 6வழிப் பாதை, 2அடுக்கு போக்குவரத்து என உலகத் தரத்தில் அமைக்க பட்ட சென்னை கத்திபாரா வண்ணத்து பூச்சி வடிவ பாலத்தில் விபத்தில் இரந்தவரின் ரத்தத்தால் சிகப்பு வண்ணம் பூச காரணமாய் இருந்த சென்னை போக்குவரத்து காவல்(செ.போ.கா), நெ.து.
இந்த துறையினர் இந்த முறை முள்கிரீடம் பெறுகின்றனர்.
பி.கு: விபத்துக்களை தொடருந்து மேலும் 30 வழிகாட்டி(சைன்போர்டுகள்) வைக்க செ.போ.கா முடிவு செய்துள்ளது(ஏற்கனவே 90 வழிகாடிகள் உள்ளதாக செ.போ.கா குறிப்பிட்டுள்ளது). கத்திபாரா, போரூர் போன்ற சாலை சந்திப்புகளில் சிசிடிவி காமிராக்கள் வைக்கவுள்ளது செ.போ.கா.

மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸ்

கடந்த செவ்வாய் என் திருவாய் கண்டதையும் தின்ற பலனாய் தூக்கம் வரலை. பெட்ரூம்ல என் ரூம்மெட்(நான் என்-திராயன் எழுத காரணமானவன் ) 'அழகன்' படத்தில் வரும் 'என் வீட்டில்....' பாட்டு ரேஞ்சுக்கு மொபைல்ல பேசிக்கிட்டிருந்தான். 12மணி தாண்டியும் அவன் ஓயாததால அவன் கிட்ட இருந்து தப்பிக்க எஃப்.எம் கேக்க ஆரம்பிச்சேன்.
அப்ப செம சூடான ஒரு எஃப்.எம்ல லவ் டாக்டர் ஒருத்தரு பேசிக்கிடிருந்தாங்க... அவங்க இன்னிக்கு நம்ம கிட்ட மிஸ்.எக்ஸ் பேசவந்திருக்காங்க, அவங்க கிட்ட பேசுரதுக்கு முன்னாடி ஒரு பாட்டு கேளுங்கனு ரெண்டு பாட்டு போட்டாங்க. சரி ரொம்ப நல்ல்வங்களா இருகங்களேனு நானும் பாட்டு முடிஞ்சு நிகழ்ச்சிய தொடருந்து கேட்டேன்.

அந்த மிஸ்.எக்ஸ் அவங்கள பத்தி ஒரு சிறுகுறிப்பு(சுமார் 3நிமிஷம்)சொன்னாங்க. உடனே நம்ம லவ் டாக்டரு யாருக்கெல்லாம் மிஸ்.எக்ஸ புடிசிருக்கோ உடனே உங்க மொபைல எடுத்து ஒரு 5டிஜிட்(இப்ப எல்லாம் டிவி, ரேடியோ இதுக்கெல்லாம் விளம்பரத்தை விட இந்த எஸ்.எம்.எஸ் தான் அதிக வருமானம் தருதோ?) எண்ணுக்கு மெசேஜ் அனுப்புங்க, பிறகு நீங்க மிஸ்.எக்ஸோட பிரெண்டு புடிசிக்கலாம் அப்படினாங்க. 'ஆகா இது.. அது இல்ல..' அப்படினு நான் கொஞ்சம் ஷாக்காகி முடிக்கிறதுக்குள்ள இன்னும் ரெண்டு பாட்டு ஓவர். அப்பறமா கொஞ்சம் கொஞ்சம் பாட்டுக்கு நடுவுல மிஸ்.எக்ஸ் அவங்களோட கனவு கண்ணன் பத்தி சொன்னாங்க. அது என் கிரெடிட் கார்ட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ விட பயங்கரமா இருந்துது.
இவங்க சொல்லி முடிச்சதும் லவ் டாக்டரு ஒரு அருமையான கருத்து சொன்னாங்க மிஸ்.எக்ஸ் ஒரு கிளாசிக்கல் டான்சர் அதனால மிஸ்டர்.எக்ஸ் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாம். அப்படி பார்த்தா பத்மா சுப்ரமனியம் மாதிரி டான்சர் பின்னாடி ஒரு எக்ஸ் கூட்டமே அலையனும். அடப்பாவிகளா கலைய கொலை ஆக்கிட்டீங்களே!!
மணி 12.45 ஆச்சு.. நம்ம லவ் டாக்டரு மிஸ்.எக்ஸ்க்கு வாழ்த்தெல்லாம் சொல்லி முடிச்சாங்க. சரி இதோட இந்த காமெடி டைம் முடிஞ்சுதுனு நினைச்சேன். ஆனா அப்பதான் அந்த பயங்கரம்... லவ் டாக்டரு சொன்னாங்க "வாங்க நம்ம போன வாரம் பேசின மிஸ்டர்.எக்ஸ்கு கனவு கன்னி கிடைச்சாங்க்களானு பார்ப்போம்னு" சொல்லி 3 விளம்பரத்தை ஓட்டி விட்டாங்க. பின்னர் ஒருத்தருக்கு போன் பண்ணினா, அந்த் பக்கம் ஒரு மிஸ்டர்.எக்ஸ் தூக்க கலக்கத்துல "எனக்கு இன்னும் கனவு கன்னி கிடைக்கல.. நான் சொன்னேன்ல எனக்கு கிடைகாதுனு.." இப்படி சொன்னதையே சொல்லிட்டிருந்தாரா... நம்ம லவ் டாக்டரு உடனே "இல்ல எக்ஸ் நீங்க ரொம்ப லக்கி உங்களுக்காக ஒரு மிஸ் காத்துகிடிருக்காங்க. அவங்க கிட்ட பேசுங்க" அப்படினு ஒரு மிஸ்.எக்ஸ்கு போன் பண்ணினாங்க. அப்ப ஒரு மிஸ்.எக்ஸ் எக்கச்ச்க்க வெக்கத்தோட மிஸ்டர்.எக்ஸ் கிட்ட பேசினாங்க. மிஸ்டர் எக்ஸ ஏன் புடிக்கும்னு அபத்தமா(தெய்வீகமா?) ஒரு காரணத்தையும் சொன்னாங்க. அதுல நம்ம மிஸ்டர்.எக்ஸ் அப்படியே கரைஞ்சுபோய்டாரு. கடைசியா லவ் டாக்டரு மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸோட பேர சொல்லி, அவங்க உறவு பலமா இருக்க வாழ்த, மிஸ்டர் அண்ட் மிஸ் எக்ஸ் சிரிக்க, இப்படியும் ஒரு நிகழ்சிய தூங்காம கேட்ட என்ன நினைச்சு நானே சிரிப்பா சிரிக்க நிகழ்சி முடிஞ்சிது.
இப்படியே போனா லெட்டர் காதல், போன் காதல், பாத்து காதல், பாக்காத காதல், இண்டெர்னெட் காதல் இந்த வரிசையில் ரேடியோ காதலை வைத்து ஒரு தமிழ் சினிமாவும், சில கொலை, தற்கொலைகளை செய்தியாவும் பாக்கலாம்.
பி.கு: இன்னும் எஸ்.எஸ் இன் போன் கால் முடியவில்லை.... (அவன் ஒரு தொடர்கதை!!!)

24-10-2008 அன்று பூங்கொத்தும் மூள் கிரீடமும்

சந்த்ராயனை வின்னில் செலுத்தி வெற்றி கண்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்தமுறை பூங்கொத்து வழங்கப்படுகிறது.

பிரிவினைவாதம் என்னும் பெயரில் அரசியல் காரணங்களுக்காக வைகோவை கைது செய்து தன் இரங்கல்பாவில் தானே அச்சுப்பிழை ஏற்ப்படுதியதற்க்காக இந்த முறை முத்தமிழ் வித்தகர் முள் கிரீடம் பெருகிறார்.

மலர்வளையம்

இது என்ன புது பகுதின்னு யோசிக்க வேண்டாம், பொதுவா அஞ்சலின்னு தலைப்போட வர இரங்கல் செய்திகள் தான்.

இந்த பதிவின் முதல் இரங்கல் பா..
அமரர் ஜெ சித்திக்கு இதை சமர்ப்பிக்கிறேன்..

நான் பார்த்து ரசித்த பெண்களில் ஒருவர், புன்னகை இதயத்தை திறக்கும் சாவி என்பதை நிரூபித்தவர். இன்று நீ இறைவனடி சேர்ந்தாலும் என்றும் எங்கள் புன்னகையில் வாழ்வாய்!!!

பட்ட கல்லில் படும்

நேற்று இரவு ஆபீஸ் முடிந்து வீடு திரும்ப பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தேன். வானிலை அறிக்கை உண்மை என்பது போல மழை கொட்டத தொடங்கியது. ரோட்டை பிறிக்க சென்னை போக்குவரத்து காவலால் போடப்பட்ட கற்கள் மூழ்க ஆரம்பித்தன. அப்போது அந்த வழி வந்த சென்னை சாலைகளின் செல்லப்பிள்ளை(ஆட்டோ) முன்னால் சென்ற இன்னொரு பிள்ளையை முந்தப்பார்து மூழ்கிய கற்களில் மோதி ஒரு கல்லை உடைத்ததோடு தன் ஒரு காலையும் இழந்து நொண்டியபடியே சென்றது. அடுத்த சில நொடிகளில் புயலாய் வந்த பஸ் ஒன்று தன் பங்குக்கு மூன்று கற்களை பதம்பாற்து அதே வேகத்தில் மறைந்தது. இதில் சிதறிய ஒரு கல் மேல் குட்டி யானை(லோடு ஆட்டோ)ஒன்று லேசக மோதி இன்னும் கொஞ்சம் நடுரோட்டிற்கு தள்ளி விட டூ-வீலரில் வந்த ஒருவரின் காலில் காயம் ஏற்படுத்திய பிறகு, அந்த டூ-வீலர் ஆசாமி, மற்றும் சில நல்ல உள்ள்கங்களின் முயற்சசியால் கற்கள் எல்லாம் மீண்டும் பழைய நிலையான மூழ்கிய நிலையில் அதே இடத்தில் வைக்கப்பட்டன.
இதற்குள் பஸ் வந்துவிட, அதன் தொடர்ச்சியை பார்க்க முடிய வில்லை. ஆனால் பஸ்ஸின் ஜன்னல் வழி பார்த்தபோது முதல் பிள்ளையை போல் மீண்டும் ஒரு பிள்ளை வைப்பர்(மழை நீர் துடைப்பான்????) இல்லாமல் எதிர்திசையில் சென்றது.

என்-திராயன்

சந்திராயன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இன்று, சென்னையின் மழைக்காலத்தில் ஒரு காலை பொழுதின் வெற்றிகரமான என் ஆபிஸ் பயணம் இது.
என்றும் இல்லா திருநாளாக இன்று ஆபிஸ்-க்கு சரியான நேரத்தில் செல்ல நேற்றிரவே முடிவு செய்தேன்(இதற்கு என்னுடன் குடித்தனம் நடத்தும் நண்பனின் தொல்லையும் ஒரு காரனம்)

(படிப்பவர் மன்னிக்க - இன்று முதல் பதிவுகளிள் செந்த்தமிழுடன் சென்னைத்தமிழும் கமழும்)
இதுக்காக, அதிகாலை 8மணிக்கே அலாரம் வைத்தது போல் எழுப்பியும்விட்டான் அந்த நல்லவன். மழையை கர்ரணம் சொல்லி லேட் ஆக்கலாம் என்றால் எனக்காகவே நின்றது போல் 9மணிக்கு மழை நின்றது. இதற்ககுள் என் நண்பன் பொருமை அதிகமாகி எனக்கு அன்பாக வலியுறுத்த வேற வழி இல்லாம வீட்டிலிருந்து கிளம்பி 9.30மணிக்கு பஸ் ஏறியாச்சு. கூட்டத்தில் போராடி புட்போர்ட்ல எடம் பிடிச்சு, ஒரு கைபுடில தொங்கி போராடி டிக்கெட் எடுத்து முடிக்கரதுகுள்ள 20நிமிஷம் போச்சு. பின் 3நிமிஷமா பஸ் ட்ராப்பிக்ல நகராத்தால புட்போர்டுல ஏன் தொங்கணும்னு கிழ குதிச்சா ஒரு இன்ப அதிர்ச்சி. நான் எங்க பஸ்ல ஏரினேனோ அதிலிருந்து நான் 5ஆம் வகுப்பில் லெமன் அண்டு ஸ்பூனு போட்டில ஒடி ஜெயிச்ச 50மீட்டர கூட பஸ் இப்ப தாண்டல.
மழைச்சாரல், வாகனங்கள் வாரி தெளிக்கும் தண்ணீர்னு எவ்வளவு கஷ்டமிருந்தாலும் பஸ்ஸின் பாதி கூட்டம் புட்போர்டில் தான்.(இதுக்கு பேசாம பஸ் முழுக்க புட்போர்டா இருந்தா கொஞ்சம் கூட்டநெரிசல குறைக்கலாமே) அவங்களை எல்லாம் தாண்டி பஸ்ல ஏரின 30ஆவது நிமிடம் டிரைவர்க்கு பின்னாடி இடம் புடிச்சு வாழ் நாள் சாதனை பண்ணியாச்சு. அப்படி என்னதான் காரணம் டிராபிக் ஜாம்க்கு நமக்கு ஏதாவது தெரியுதானு, டிரைவர் கண்ணாடில பாத்தேன் ஒன்னும் தெரியல. ஆனா இப்படி டிரைவர் சீட்க்கு பக்கத்துல நின்னதுக்கு பலன் கொஞ்ச நேரத்துல தெரிய ஆரம்பிச்சுது. அது என்னனா, ஒவ்வொரு பிரேக்குக்ம் மொத்த கூட்டமும் முன்னாடி இருக்கரவங்க மேல சாய்ந்து, எல்லாரும் என் மேல சாய்ந்து மொத்த பஸ்ஸும் என் முதுகில் நிற்பது போன்ற பிரமை ஏற்ப்பட்டது. இதற்கு நடுவே என் அருகில் இருந்த இருவர் தங்கள் வட்ட கௌன்சிலரின் ஊழல் பற்றி பேச ஆரம்பித்தனர். அவர்கள் இந்திய அரசியலை அலசியபோது பஸ் மீனாட்சி கல்லூரியை அடைந்தது. பின்னர் டிராபிக் ஜாமின் கிளைமாக்ஸ் காட்சியாக வள்ளுவர் கோட்டம் தாண்டி காலேஜ் ரோடு வந்தபோது அருகில் இருந்தவர் கடிகாரத்தில் நேரம் 11.15 என பயம்காட்டியது.

பின்னர் இலையுதிர்கால மரம் போல கூட்டதை எல்லாம் காலேஜ் ரோட்டில் உதிர்த்துவிட்ட பின் பஸ்ஸும், நானும் கொஞ்சம் காற்று வாங்கினோம். பின் வரும் ஒரு பஸ் ஸ்டாப்பில் நமது இரட்டையர் ஒபாமா வெற்றி பெருவாரா இல்லையா என்பதை கடைசி வரை சொல்லாமலே இரங்கிவிட்டனர். சிறிது நேரத்தில் 5கீமி கடந்து எனது 2 மணி நேர பயணம் முடிவிற்கு வர, காலையில் என்னை ஆபீஸிற்கு அனுப்பிய ஆருயிர் நண்பனை வாழ்த்திகொண்டே இறங்கியதும் எனக்காகவே காத்திருந்தது போல் மழை கொட்ட தொடங்கியது. மழை தூரலாக மாரிய நேரம் ஃப்ளை ஓவரிலிருந்து கொட்டும் மழையருவி, ஹோலி பண்டிகையின் விட்டகுறை தொட்டகுறையாக வண்ணத்தை வாரி இரைக்கும் வாகனங்கள் இதை எல்லாம் தாண்டி, நீந்தி ஆபீஸை அடைந்தபோது மணி 12.30(வழக்கதை விட ஒரு மணி தாமதம்).
இதே போன்ற பிரம்மப்பிரயத்தனம் மாலை தேவைப்படும் என்பதால் இன்று வழகத்தை விட ஒரு மணி முன்னாடி எஸ்கேப் ஆக முடிவு செய்து நானும் என் மலைகோட்டை நண்பனும் கிளம்புவதற்காக இந்த அனு(பா)பவத்தை முடிதுக்கொள்வோமாக.
குறிப்பு: அப்படியே மாலை சென்றாலும் எனக்கு 50காசு சில்லரை தரவேண்டிய கண்டக்டர், ஒபாமாவின் முடிவை சொல்லவேண்டிய இரட்டையர், காலேஜ் ரோட்டில் காலையில் வந்த பஸ் உதிர்ந்த மலர்கள் இவர்களை சந்திக்க முடியுமா???

நிலாக்காலம்

இன்று காலை 6.21 மனிக்கு சந்திராயன்-1 பி.எஸ்.எல்.வி-சி 11 செயர்கைகோள் மூலம் வின்னில் செலுதப்பட்டது. சரியாக 18.2 நிமிட பயனதிற்க்கு பிறகு ராக்கெட்டில் இருந்து விடைப்பெற்று சந்திராயன் தன் பயணத்தை தொடங்கியது. சுமார் 387,000கீ.மி பயனித்தபின் இது சந்திரனின் சுற்றுப்பாதயை அடைந்து நவ8 ஆம் தேதி வாக்கில் அதன் இலக்கான(சந்திரனின் மேல் பரப்பிலிருந்து சுமார் 100 கீ.மி) அடையும். 355 கோடியில் உருவான சந்தராயனில் உள்ள 11 சோதனை கருவிகளில் 5 இந்தியாவில் உருவானவை. சந்திராயன் நவ 2ஆம் வாரம் நிலவில் இந்தியக்கொடியை நடுவதை தொடருந்து நிலவை அடைந்த ஆறாவது நாடெனும் பெருமையை நம் இந்தியா பெருகிறது.
குறிப்பு: இந்த வெற்றிப்பாதையில் நடந்தால் 2020ல் முதல் இந்தியர் நிலவில் கால் பதிப்பார்!!

கவலை

இறைவனை எண்ணி கவலை கொள்கிறேன்....
என்னவளுக்கே அழகை எல்லாம் அள்ளிதந்துவிட்டு
பின்னர் படைப்பதற்கு செய்வதறியாது தவிப்பதை கண்டு!!

21-10-2008 அன்று பூங்கொத்தும், மூள் கிரீடமும்

மக்கள் டிவி இந்த முறை
பட்டணப்பிரவேசத்தின் பூங்கொத்து பெறுகிறது.
காரணம் தமிழ் தொலைக்காட்சியை முடிந்தவரை தமிழிலும் சினிமா அல்லாத நிகழ்ச்சிகளும் வழங்குவதால்.
கலைஞர் டிவி இந்தமுறை
மூள் கிரீடம் பெறுகிறது, காரணம் பகுத்தறிவு பாசறையிலிருந்து வெளிவரும் இந்த டிவி சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் வாழ்த்து வழங்காத பண்டிகைகளே இல்லை(இதில் நிச்சயமாக சமத்துவம் உண்டு). மேலும் இந்தியை எதிர்த்து தமிழ்வளர்த்த இவர்கள் தொலைகாட்சியில் தொகுப்பாளரின் உரையாடல் முதல் நிகழ்ச்சியின் பெயர்கள் வரை எதிலும் தமிழ் வாழ்வாங்கு வாழ்வதால்.

முள்ளை முள்ளால் எடுக்கின்றோம்

அக் ௨0 2008 ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிர்மான் அமைப்பினர் மும்பையில் ரயில்வே கமிஷன் தேர்வு எழுத வந்திருந்த வடநாட்டவர்(குறிப்பாக உபி மற்றும் பீகார்) மீது தாக்குதல் நடத்தினர். இவர்கள் வினா தாள்களை கிழித்தும், கல்வீச்சு நடத்தியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் பவன் என்ற பீகார் வாலிபர் பலியானார். உலகமயமாக்கலால் எல்லைகள் விரிவடைந்துவரும் இந்த நாட்களில் ஒரு நாட்டின் ஒரு பகுதியினர் இன்னொரு பகுதியில் அரசாங்க வேலை வேண்டிநிற்பது தவறாக கருதபடுகிறது. நவநிர்மான் அமைப்பினர் இதற்கு சொல்லும் காரணம் வெளிமாநிலதவரால் இவர்கள் வேலைபரிபோகிறது என்பதாகும். இத்தனைக்கும் ரயில்வே துறை பல பிரிவுகளாக செயல் பட்டாலும் மத்திய அரசின் கட்டுபாட்டில் வரும் ஒரு இந்திய நிறுவனமே.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பீகார் சென்றதும் பாட்னா ரயில்நிலையத்தை சூறையாடினர். நவநிர்மான் அமைப்பினர் சொல்லும் காரணம் நியமாக இருந்தாலும்(அப்படிஎன்றால் மகாராஷ்டிராவிலிருந்து பிற மாநிலங்களுக்கு வேலை தேடி வருவோரையும், தொழில் செய்பவர்களையும் மகாராஷ்டிரவிற்கே துரத்த வேண்டுமா??) அதற்கு ஒரு விவசாயி மகனின் உயிர் விலை அல்ல. அதேபோல் இதை எதிர்க்க பாட்னா ரயில்நிலையத்தை சூறையாடியதும் கண்டிகவேண்டியதே.
இதை தொடருந்து ராஜ் தாகரே கைது செய்வதில் தாமதம் இருந்தாலும் அந்த நடவடிக்கை பாராட்ட வேண்டியதே.
குறிப்பு: ராஜ் தாகரேயின் செயலை கண்டித்துள்ள சிவசேனா அயிந்து ஆண்டுகளுக்கு முன் இதே காரணதிற்காக ரயில்வே தேர்வு துறை அலுவலகத்தை சேதப்படுத்தி அதன் சேர்மன்-ஐ தாக்கியது நமக்கு மறந்திருக்கலாம்.
எது எப்படியோ நாம் அனைவரும் நல்ல முறையில் மொழி, இனம், மாநிலம் என்ற பற்றுதலில் (அல்லது அரசியல் போர்வையில்) இந்தியர் என்பதை மறந்து மாநிலதிர்கொரு இந்தியாவாக பிரிந்தாலும் ஆச்சரியமில்லை.

காதல்

காதல் தொலைத்த புத்தகத்தில்

பிடித்த கவிதையா??

பிடித்த கவிதையின்

எழுத்து பிழையா????

ஆடாத ஆட்டமெல்லாம்

விஜய் டிவி யின் புண்ணியத்தால் தமிழ் கூறும் நல்உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டது பல்சுவை ஆடல்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள். இது மெல்ல எல்லா சாட்லைட் டிவி களிலும் (ஆ )ரம்பமகிவிடது. இதில் ஆடுவதை விட அழுவதற்கு பரிசுகள் அதிகமோ? ஒரு எபிசொடிற்கு மூன்று விளம்பர இடைவேளை என்பதுபோல் இருவர் கட்டாயம் அழவேண்டும், அதுவும் அவர்கள் இருவரும் ஜோடியாக ஆடுபவர்கள் என்றால் ஆகா, சொல்ல வரதில்லை. நம்ம மக்கள் அறிவிக்கப்பட்ட அறிவிக்கப்படாத மின் துண்டிப்பு எலாம் தாண்டி நெடுந்தொடருபார்த்து வாழ்கை முழுக்க அழ பழகியதால் நடன நிகழ்ச்சிக்கும் அழுகை தேவையோ? இப்படியே போனா காமெடி நிகழ்ச்சில கூட கண் கலங்கும் சோக காட்சிகள் தேவை படலாம்.

ஈழமும் இந்திய அரசியலும்

செப் 19, ராமேஸ்வரத்தில் சினிமா துறையினர் சார்பில் இல்அங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து பேரணி நடைபெற்றது. இதில் கவனிக்க தக்கவை...
1. பேரணி மேடையை பார்த்த பொழுது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்க கூட்டம் போன்ற தோற்றம், படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டும் ஏன் யாரும் வரவில்லை. தொழில் முறையில் போட்டிகள் இருந்தாலும் மனிதநேயத்தோடு பங்கு கொள்ளலாமே.
2. மேடையில் பேசியவர்களில் பெரும்பாலும் இரண்டு விஷயங்களை சுட்டிகாட்ட தவறவில்லை. ஒன்று இதில் பங்கேற்காதவர்களை பற்றி தமிழ் துரோகிகள் என அறிவித்தல். இரண்டு பிரபாகரானை வீரனாக போற்றுதல்.
3. சேரன் அவர்களின் பேச்சில் மட்டும் ஒரு ஆதங்கம், காவிரி பிரச்சனைக்கு நெய்வேலி சென்றோம், ஒகேனக்கல் பிரச்சனைக்கு போராடினோம், இன்று ராமேஸ்வரம் வந்திருக்கிறோம் இதை இன்றோடு மறந்து நட்சத்திரங்களை பார்த்து ரசித்ததோடு செல்லாமல், இந்த பிரச்சனையை இந்திய அரசு தீர்க்கும் வரை தேர்தலை புறக்கணிக்கலாம் என்றார். இது சாத்தியமா? சாதியமாகினால் மீன் பிடிக்க செல்லும் இந்தியர்கள் கருவாடாய் திரும்புவதை தவிர்க்கலாம்.
4. வைகை புயல் வீசிய பொழுது இலங்கை தமிழர்களின் ஆதரவு குரலுக்கு இணையாக, மீண்டும் கல்வீச்சு நடக்குமோ என்ற கவலயும் இருந்தது.
5. தமிழ் திரை உலகின் நடிகன் என்ற முறையில் கலந்துகொண்ட ஜீவா தமிழ்நாட்டவர் அல்ல என சுட்டப்பட்டார்.
மொத்தத்தில் இந்த மேடை ராஜபக்ஷே என்னும் ஒருவரை தூற்றி பிரபாகரனை புகழ்ந்து, தனித் தமிழ்நாடு தேவையோ என்னும் என்னத்தை ஏற்படுத்த முயற்சித்ததே அன்றி வேறொன்றும் இல்லை.
ஆனால் இதில் சீமானின் ஒரு கேள்விக்கு மத்திய அரசு பதில் தருமா?
அவரது கேள்வி, ரசாயன ஆயுதம் இருக்கலாம் என்பதற்காக ஈராக்கை அமெரிக்கா போர் புரியலாம் என்றால், இந்திய மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை கடல் படையை இந்திய அரசு ஏன் எதிர்கவில்லை?

ஒன்று மட்டும் நிச்சயம் இதில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களுக்கு போதிய பாதுகாப்பும், தேவைபட்டால் இந்திய இலங்கை கடல் படைகளின் கூட்டு முயற்சிகளும் தேவை. சாகுபடியின் பொழுது மட்டும் பேசப்படும் காவேரி பிரச்சனை போல் இல்லாமல், இலங்கை அரசை கண்டித்து அறிக்கைகளும், கழகங்களுக்கு ஒன்றாக கண்டன கூட்டங்களும், இரங்கல் கவிதைகளும் என்று நிற்காது.. இதுவரை இதை அரசியல் ஆதாயங்களுக்கு பயன் படுத்தியது போதும் என்று மாநில அரசும், பிற கட்சிகளும் உருப்படியாக செயல்பட வேண்டும்.

நான் தான் வாழவந்தான்

வணக்கம்,

நான் தான் வாழவந்தான், வருடத்தில் சில மாதங்கள் மட்டும் கர்நாடகத்தின் வெள்ள உபரிநீராக காவிரி பாயும் கோவில் நகரில் பிறந்தவன் நான். 'கெட்டும் பட்டணம் போ' என்பார்கள். ஆக எங்கோ பிறந்து என்ஜீநீரிங் படிக்க என்று இந்த சென்னைக்கு வந்தது, வென்றது, இழந்தவை, உணர்ந்தவை, ரசித்தவை என்றும், சென்னை எனக்குள் ஏற்பத்திய மாற்றங்களும், மேலே சொன்னதற்கு நேர்மாறாக நான் சென்னையை கெடுத்தும் வலைப்பதிவில் இடம் பெற இருப்பதால் இது ஏன் பட்டனப்ரவேசம் ஆகியது. வாழவந்தான் பெயர் காரணம் அறிய விரும்பும் அன்பு உள்ளங்களே, நான் மட்டும் இல்ல என்னை போல் இந்த வாழ்கையை வரமாக எண்ணிவாழ்பவர்கள் அனைவரும் வாழ வந்தவர்களே. மேலும் சென்னை நான் வாழவந்த இடம், எனக்கு வாழ்வளித்த இடம் அதனாலும் இந்த பெயர்.