மகளிர் தின வாழ்த்துக்கள்



மகளிரை மகரந்த மலர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களின் மகோன்னதத்தையும் போற்றுவோம்!

என் வாழ்வில் நான் சந்தித்த அனைத்து பெண்களுக்கும் இந்த உலக மகளிருக்கும் அவர்களையும் மனிதர்களாக பார்ப்பவர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

மகளிராக பிறந்தது உங்கள் வரம் இதை உணர்ந்து மகிழுங்கள்!!


ஏலம் ஒரு பார்வை

இதில் நீதிமன்றம் கூறியது போல் காந்தியுடன் தொடர்புடைய அனைத்தும் இந்தியாவின் சொத்து என்று கொள்ளமுடியாது ஏனெனில், காந்தி தான் உபோயோகித்த பல பொருட்களை அன்பளிப்புகளாக கொடுத்திருக்கலாம் அது பல மனிதர்களை தாண்டி இன்று ஒருவரிடம் உள்ளது, அவர் அதை விற்க நினைக்கிறார் அவ்வளவே!

இதில் கவலைப்பட ஒன்றும் இல்லை. நவஜீவன் சொல்லுவது போல் அந்த பொருட்கள் நவஜீவநிலிருந்து திருடப்பட்டவை என்பது அபத்தமானதாகும். இது உண்மை என்றால் அவர்கள் மீதம் இருக்கும் பொருட்களையாவது ஒழுங்காக பாதுகாப்பார்களா?


அக்டோபர் 2 சமாதியில் அஞ்சலி, ப்ளாக்கில் மது; எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் விளம்பர ஆதாயம் தேட அடையாள உண்ணாவிரதம் என்ற அளவில் காந்தியின் சிந்தைகளை பின்பற்றும் நாம் அந்த ஏல பொருட்களை வைத்து மட்டும் என்ன செய்ய போகிறோம்?


உடனே நீ இந்தியனா? ஒரு பையன் அவன் அப்பாவின் பொருட்களை நினைவு சின்னமாக பாதுகாக்கவேண்டாமா? இப்படி ஏலம் போறத பார்த்துக்கொண்டிருக்கலாமானு கேனத்தனமா கேள்வி கேக்காதீங்க..எங்க அப்பா பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு மோதிரம் தராரு அதை எங்க அப்பாவின் மறைவுக்கு பின் என் பக்கத்து வீட்டுக்காரரோ இல்லை அவரிடம் இருந்து அதை பெற்ற ஒருவரோ விற்றால் அதை நான் தடுப்பது சரியாகுமா? அவரின் நினைவாக அவர் காட்டிய வழியில் வாழ்வது, அவர் எனக்கென விட்டு சென்ற பொருட்களை அவர் நினைவாக பாதுகாப்தும்தானே சரியாகும். இதை விட்டு எங்க அப்பா உபயோகிச்சது எல்லாம் என்னோடது அத்தை நான்தான் வெச்சுக்குவேன்னு சொல்லமுடியுமா? எங்க அப்ப, மயில் சிம்மாசனம், கோகினூர் வைரம் இந்த மாதிரி பொருட்களை வாங்கிட்டு வரசொல்லுங்களேன்! ஒழுங்கா காந்தி மியுசியம்களில் இருக்கும் பொருட்கள் திருடுபோகாமலும், அவர் சொல்லிய வழிகளை நடைமுறையிலும் பின்பற்றுங்கப்பா!

இதுல விஜய் மல்லையாவை சும்மா சாராய வியாபாரி அவரு எப்படி காந்தி பொருட்களை வாங்கலாம்னு சொல்றதும் சரியில்லை. இவரின் முயற்ச்சியை நல்ல மார்கெடிங் யுத்தி என்ற வகையில் பாராட்டலாம். அவரோட நல்ல என்னத்தை புரிஞ்சுகாதன் நீ அப்படீன்னு சொல்றவங்களுக்கு ஒரு கேள்வி. இப்படி கோடிகளை கொட்டி ஏலம் எடுப்பவர் அதே காசை கொண்டு இந்திய அரசு சார் பெட்ரோல் நிறுவன கடன்களை அடைககலாமா இல்லையா.

இந்த நிலையை என்னிபார்க்கும் போது அனுஜன்யா அவர்களின் இந்த கவிதை தான் நினைவுக்கு வருகிறது...
பிரியமான அப்பாவுடந்தான்

தந்தையர் தினம் செலவழிந்தது

அந்த முதியோர் இல்லத்தில்!

ஒரு தரம்! ரெண்டு தரம்!! மூணு தரம்!!!

இந்த வாரம் காந்தியடிகளின் கண்ணாடி, கடிகாரம், இரண்டு பாத்திரங்கள், ஒரு லெட்டர் ஆகியவை ஏலத்திற்கு வந்தன. இதை அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்னும் காந்திபக்தர்(?) ஏலத்தில் தருவதாக அறிவித்தார். இதை தொடருந்து 2007 ஆம் ஆண்டு காந்தியடிகளின் கடிதம் ஒன்று ஏலம் விட இருந்ததை தடுத்து இந்திய அரசே அதை வாங்கியது போல இந்த முறையும் செய்துவிடலாம் என நினைத்து கடைசி நேரத்தில் முயற்சி செய்து பார்த்தது. மார்ச் 4 ஆம் தேதி ஆமதாபாத்தை சேர்ந்த நவஜீவன் நிலையம்(இவர்களே தனது சொத்துகளாக கருதப்படும் அசையும், அசையா பொருட்களுக்கு உரிமை உள்ளவர்கள் என்று காந்தியடிகளே குறிப்பிட்டுள்ளார்) தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த ஏலத்திற்கு தடை விதித்தது.

இந்நிலையில் இந்த பொருட்களின் உடைமையாளர் ஓடிஸ் அவர்களே இவற்றை இந்திய அரசுக்கு தருவதாகவும் அதற்க்கு அரசு தன் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றும் கூறினார். அவர் வைத்த கோரிக்கைகள் 'இந்திய அரசு ஏழைகளின் சுகாதாரத்திற்கு செலவு செய்யும் தொகையை 1% இருந்து 5% ஆகா உயர்த்துதல்' அல்லது 'சுமார் 78 உலக நாடுகளில் காந்தியை பற்றிய நடமாடும் கண்காட்சி அரசு செலவில்'. இந்த கோரிக்கைகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக அரசு ஏற்க மறுத்து, ஏலத்தின் ஆரம்ப தொகையான 20,000 டாலர்களுக்கு அதை வாங்க முன்வந்தது.

ஆனால் ஓடிஸ் இதை மறுக்க, டெல்லி நீதிமன்றத்தின் கீழ் இந்த ஏலம் வராது என கூறி ஏல கம்பனி ஏலத்தை இன்று நடத்தியது. கடைசியில் இதை பொருட்களை வைத்திருந்த ஓடிஸ் தடுத்தும் நடைபெற்றது வேறு கதை. இவ்வளவு சிக்கல்களுக்கு பின் இந்த ஏலத்தில் ஐந்து பொருட்களையும் கிங்க்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா 1.80 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். பின் இந்த பொருட்களை இந்திய அரசிடம் ஒப்படைப்பதாகவும் அறிவித்தார்.
இதை பற்றிய கருத்துகள் நாளை......

தேர்தல் திருவிழா தேதிகள்!!

இந்தியாவின் 15 ஆவது லோக் சபா தேர்தல் தேதி அறிவிச்சுட்டாங்கப்பா!!!ஏப்ரல் 16 முதல் மே 13 வரை 5 கட்ட தேர்தல்..மே 16 வாக்கு எண்ணிக்கை..ஆக, சரியாக ஒரு மாதம் இந்தியாவில் தேர்தல் திருவிழா.

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மே 13 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது

இந்த தேர்தலில் மொத்தம் 714000000 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சுமார் அறுபது லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 8,28,804.

இதில், ஜம்மு, உ.பி யில் ஐந்து கட்டமாகவும்; பீகாரில் நான்கு கட்டமாகவும்; மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தில் மூன்று கட்டமாகவும்; ஆந்திரா, அசாம், கர்நாடகா, ஜார்கண்ட், ம.பி, ஒரிசா, பஞ்சாப் ஆகியவற்றில் இரண்டு கட்டமாகவும்; மற்ற மாநிலம், யூனியன் பிரதேசங்களில் ஒரு கட்டமாகவும் தேர்தல் நடை பெறவுள்ளது.

தேர்தல் தேதிகள் மற்றும் தேர்தல் நடைபெறும் தொகுதி எண்ணிக்கை:

ஏப்ரல் 16 -124 தொகுதி, ஏப்ரல் 22,23 - 141 தொகுதி, ஏப்ரல் 30 - 107 தொகுதி, மே 7 - 85 தொகுதி, மே 13 - 86 தொகுதி. மணிப்பூரில் மட்டும் ஏப்ரல் 23 பதிலாக ஏப்ரல் 22 தேர்தல் நடைபெறும்(ஏப்ரல் 23 மணிப்பூரில் உள்ளூர் விடுமுறை)